தமிழ்நாடு பயணர் சங்கம்

தமிழ்நாடு பயணர் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது !!... இறைவன் படைத்த இந்த இனிய உலகில் பயணம் செய்யலாம் வாங்க ..
உங்களின் மேலான கருத்துகளை மிகுந்த உவகையுடன் எதிர்பார்கிறேன் ..
அன்புடன் உங்கள் ராம்கி

என்னை பற்றி...

salem, tamilnadu, India
Tamilnadu Trekking Club(TTC) காடுகளின் ஊடாக களபயணம் மேற்கொள்ளுவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் .என்னுடன் பயணிக்க ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும் .

Thursday 18 February 2016

ஜாதி பிசாசு – CSI சபைக்குள்ளே!

ஜாதி பிசாசு – CSI சபைக்குள்ளே!

ஜாதி பிசாசு – CSI சபைக்குள்ளே!
எச்சரிக்கை! எச்சரிக்கை!!
ஜாதி பிசாசு
இன்று உலகம் எங்கும் இன வித்தியாசம் நமக்குள் இருக்கக்கூடாது என்று முழு உலகதலைவர்களும் வலியுறுத்திக்கொண்டிருக்கிறார்கள். இன வித்தியாசம் இனவெறியாக மாறிவருவது நாட்டு மக்களிடம் பெரும் பிரச்சனைகளை உருவாக்கி, போராட்டங்கள் உண்டாகி, ஒருவரை ஒருவர் கொன்று குவிக்கும் நிலை முழு உலகத்திலும் இன்றும் சம்பவித்துக்கொண்டிருக்கின்றன.நம் பாரததேசத்தில் இனப்பிரச்சனையில்லை. ஆனால் ஜாதி பிரச்சனை மிக அதிமாக உண்டு. வட இந்தியா தொடங்கி தென் இந்தியாவில் கன்னியாகுமரிமுனைவரை ஜாதி பிசாசின் பிரச்சனை பூதாகாரமாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது. தேசத்தலைவர்கள், அரசியல்வாதிகள், அரசாங்கம், நீதிமன்றம் யாவும்ஜாதி வேறுபாடு நாட்டைவிட்டு நீக்கப்படவேண்டும் என்று அறிக்கையில்மட்டும் அறிவிக்கின்றனர். ஆனால் அவர்களால் செயலில் நிறைவேற்ற இயலவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், நாம் குறிப்பாக கிறிஸ்தவ சபைகள், விசுவாசிகள் ஜாதி இருக்கக்கூடாது என்று பிரசங்கிக்கிறோம். கிறிஸ்தவ சபை தலைவர்கள், ஆயர்கள், பிஷப்மார், பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்கள் ஆராதனையில் ஜாதிவெறி வேண்டாம் என்று பிரசங்கித்தாலும் ஜாதிவெறிவெளியில் காணப்படாமல் சபைகளுக்குள் மாறாமல், மறையாமல் அப்படியேதான் இருக்கிறது. கிறிஸ்தவ பிள்ளைகளின் திருமணங்களில் இவற்றைக் கண்கூடாக காண்கிறோம். இப்படி இலைமறைவாக நம் CSI சபைக்குள் புதைந்துகிடக்கும் ஜாதிவெறி, இப்போது உலகத்திலேயே குறிப்பாக இந்தியாவிலேயே முதன்முதல் மதுரை-ராமநாதபுரம் CSIதிருமண்டலத்தில் வெளிப்படையாக, துணிகரமாக ஜாதிவெறியை அச்சடித்து, அறிவித்துகாட்டியிருக்கிறார்கள். அதன்மூலம் தங்கள் ஆவிக்குரிய சாட்சி கெட்டநிலையை வெளியரங்கமாக காட்டியிருப்பது கிறிஸ்தவ உலகில் பெரும் தலைக்குனிவை உண்டாக்கிவிட்டது. இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்ட அனைவரும் ஒருதாய் வயிற்றுபிள்ளைகள் மாதிரி ஆவர். கிறிஸ்தவ சபையிலும், பரலோகத்திலும் ஜாதிக்கு இடமே இல்லை.
நீங்கள் காண்பது மதுரை-ராமநாதபுரம் திருமண்டல CSI சபை உறுப்பினர் படிவமாகும். இதில் வட்டமிட்டு காண்பித்த வார்த்தையை கவனியுங்கள். CSI சபையில் அங்கம் வகிக்கும் நீ எந்த ஜாதியை சேர்ந்தவன் என்று குறிப்பிடவேண்டுமாம். இந்தியாவில் அல்லது இலங்கையில் எங்காவது எந்த சபைகளிலாவது இப்படி ஜாதியை கேட்கும் வெட்கம்கெட்ட சாட்சியில்லாநிலையை கேட்டதுண்டா? அதனால்தான் இதை ஜாதி பிசாசு என்றேன். சபைக்குள்ளும் இந்த ஜாதிபிசாசு பலவிதங்களில் தலைவிரித்தாடுகிறது. ஜாதி என்ற பெயரில் சபை உறுப்பினர் படிவம் ரூபத்தில் இந்த ஜாதிபிசாசை மதுரை CSI திருமண்டலத்தில் வெளிப்படையாக அச்சிடப்பட்டு காட்டப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டுக்காக, ஜாதிகணக்கெடுப்புக்காக அரசாங்கம் ஆட்களை வீடுகளுக்கு அனுப்பும்போது அல்லது பள்ளியில் பிள்ளைகளை சேர்க்கும்போதும் படிவத்தில் (form) ஜாதி என்ற இடத்தில் உண்மை கிறிஸ்தவர்கள் தங்களை இந்திய கிறிஸ்தவன் என்றுமட்டுமே குறிப்பிடுவார்கள் அல்லது நாங்கள் ஜாதியைக்குறித்து எழுதவிரும்பவில்லை என்று அரசாங்க கணக்கெடுப்பின்போதே தைரியமாக, ஏராளமான உண்மை கிறிஸ்தவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மதுரை திருமண்டல CSIஅங்கத்தினர்களாகிய நீங்கள் உங்கள் படிவத்தை எழுதி நிரப்பும்போது CSI திருமண்டலம் ஜாதியைப்பற்றி கேட்பது தவறு என்றோ, ஜாதியைப்பற்றி நாங்கள் குறிப்பிடவிரும்பவில்லை என்றோ அல்லதுஇந்திய கிறிஸ்தவன் என்றோ குறிப்பிட்டு உங்கள் எண்ணத்தை அந்த படிவத்திலேயே எழுதி திருமண்டல பொறுப்பாளர்களை உணர்த்துங்கள். இந்த சாட்சிகெட்ட சபை அங்கத்தினர் விண்ணப்பபடிவத்தை தயாரித்தது, மரித்த பிஷப்.ஆசீர் அவர்கள் காலத்திலா? அல்லது இப்போதுள்ள தற்காலிக பொறுப்பாளர்களா? என்ற விவரம் அறியவில்லை. ஆனால் இது டையோசிஸ்ஸில் நடக்க இருக்கும் தேர்தலுக்கான பிசாசின் தந்திரம் ஆகும். இந்த ஏற்பாடு முழுதிருமண்டலத்திலும் எந்த ஜாதிமக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்பதை அறிவதற்காக அல்லாமல் வேறுகாரணம் நிச்சயம் இருக்காது. ஒவ்வொரு இடத்திலுள்ள CSI சபைக்குள் நம்ம ஜாதி ஆட்கள் எத்தனைபேர்,மற்ற ஜாதியை சேர்ந்தவர்கள் எத்தனைபேர் என்பதை இதன்மூலம் அறிவது மிகசுலபம். அதன் அடிப்படையில்தான் புதிய பிஷப்பும் தெரிந்தெடுக்கப்படுவார்கள். இதற்குடையோசிஸ் மக்கள் இடம்கொடுக்க கூடாது. மதுரை CSI திருமண்டலமக்கள் அனைவரும் இந்த படிவத்துக்கு உங்கள் எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும். இதை மதுரை CSI டையோசிஸ் அனுமதித்தால், மற்ற எல்லா CSIதிருமண்டலங்களிலும் இந்த ஜாதிபிசாசுகள் எளிதாக நுழைந்துவிடும். ஜெபத்தோடு சாத்வீகமான முறையில் போராட்டங்கள் எதுவும் நடத்தாமல் ஒவ்வொரு CSI சபை கமிட்டியிலும் ஜாதி எதிர்ப்பை எழுத்தில் எழுதி, அதை மினிட்சில் பதிவுசெய்து, அந்த சபை கமிட்டிகள் தனித்தனியாக உங்கள் கமிட்டி தீர்மானத்தை கடிதம் மூலம் எழுதி திருமண்டலத்துக்கும் – சினாடுக்கும் உங்கள் எதிர்ப்பை தெரியப்படுத்துங்கள் இதுதான் கிறிஸ்தவ ஒழுங்கு. தனிப்பட்டமுறையிலும் எதிர்ப்பை அறிவிக்கலாம்.
இதைநான் ஜாமக்காரன் மூலம் அறிவித்ததால் நீங்கள் என்மேல் வெறுப்புக்கொண்டு என்னை உங்கள் சபை கன்வென்ஷனுக்கு அழைத்தாலும் சரி – அழைக்கவிட்டாலும் சரி அல்லது ஏற்கனவே கூட்ட ஏற்பாடு செய்து என் தேதியை பெற்றுக்கொண்டவர்கள் என் கூட்டங்களை கேன்ஸல் செய்தாலும் சரி – என் ஜாமக்காரன் வேலையான அறிவிப்பையும், எச்சரிப்பையும் வசனத்தின்படி உங்களுக்காகவும், அனைத்து CSI, CNI மக்களுக்காகவும் இவ்விவரத்தை அறிவித்துவிட்டேன். என் கடமை முடிந்தது! தீர்மானம் எடுக்கவேண்டியது மதுரை-ராமநாதபுரம் திருமண்டல CSI சபை மக்கள், ஆயர்கள், பொறுப்பாளர்கள் ஆகிய உங்களுடையது ஆகும். இந்த விஷயத்தில் கர்த்தர் உங்கள் அனைவரையும் கணக்கு கேட்பார் என்பதை மறக்கவேண்டாம்!
மத் 17:21, இந்த ஜாதிப்பிசாசு ஜெபத்தினாலும், உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ் விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்று இயேசுகிறிஸ்து கூறினார். இந்த வசனத்தில் வரும் ஜாதிப் பிசாசு என்ற வார்த்தை மூலபாஷையில் சில முக்கியதோல் சுருள்களில் இல்லாததால் கத்தோலிக்க வேதபுத்தகத்தில் 1978 வருடத்துக்குமுன் உள்ள அவர்கள் வேதபுத்தகத்தில் இந்த 21ம் வசனத்தைமட்டும் நீக்கிவிட்டனர். இதை இங்குநான் குறிப்பிடக்காரணம் இந்தகுறிப்பிட்டவசனம் நம் இந்தியாவிலுள்ள ஜாதியை குறிக்கும் ஒருசொல் அல்ல. இந்த வசனத்தை ஒருவகைபிசாசு என்று மொழிபெயர்க்கலாம். ஆனால் நான் எழுதிய இந்த குறிப்பிட்ட எச்சரிக்கை செய்திக்காக நாம் குறிப்பிடும் இந்த ஜாதியை பிசாசுஎன்றே, நாம் பெயரிட்டு அழைப்பது நாம் ஜாக்கிரதையாக இருக்க பிரயோஜனமாக இருக்கும். ஜெபியுங்கள்.
 ஜாமக்காரன் – Dr.புஷ்பராஜ்.
(இதை சபையில் உள்ள மற்றவர்களுக்கும் போட்டோகாப்பி எடுத்து விநியோகிக்கலாம்)

சபைக்கு வேண்டாத கிறிஸ்தவர்கள்

  நான் படித்ததில் பிடித்தது
சபைக்கு வேண்டாத கிறிஸ்தவர்கள்-

தலித்பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி அவர்களின் சுயசரிதை
ஆங்கில விமர்சனம்: பிரான்சிஸ் ——-—-தமிழாக்கம்: லா.ரோஹிணி 
கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய பின்பு தலித்துகளும் வனவாசிகளும்படும் துயரமும் துன்பமும்.


எந்த ஒரு சமூகம் அல்லது கலாச்சாரத்தின் சமூக அரசியல் நிலைப்பாட்டை எடுத்து இயம்பும் கருவிகளாக கடிதங்கள் இருக்கின்றன. பல மக்கள் தங்கள்  துயரம் மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த கடிதங்களை கருவிகளாக பயன்படுத்தி உள்ளனர். பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி அவர்கள் பல கடிதங்களை தன்னுடைய சுயசரிதையான “வேண்டப்படாத பாதிரியார்” என்னும் புத்தகத்தில் எழுதி உள்ளார். கத்தோலி சர்ச்சில் பாரபட்சம் மிக அதிகமாக உள்ளது. தீண்டாமை பெருமளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த இருட்டு பக்கங்களை தலித் பாதிரியாரின் கடிதங்கள் வெளிச்சத்திற்கு  கொண்டு வந்துள்ளன. சர்ச் பற்றி உள்ள பல, அபிப்ராயங்களை அந்த கடிதங்கள் அம்பலப்படுத்தி உள்ளன.
தன்னுடைய “வேண்டப்படாத பாதிரி” என்னும் சுயசரிதையில் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி அவர்கள் பிரச்சனைகளை நேரடியாக அணுகி உள்ளார். அவருடைய எழுத்துக்கள் அவருக்கு  என உள்ள தனிப்பாணியை வெளிப்படுத்து கின்றன. இதுவரை பல மக்களுக்கும் தெரியாத உண்மைகளை, உதாரணமாக  சர்சுகளில் பாதிரியார்கள் வாழ்க்கை, சர்ச் வாழ்க்கை- என பல விஷயங்களை தலித் பாதிரியார் வில்லியம் அவர்கள் விவரித்துள்ளார். இந்த தலித்பாதிரியார் பேனாவை கையில் எடுத்தால் அவர் வார்த்தை ஜாலம் செய்வது இல்லை. வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று உண்மையை போட்டு உடைப்பதுதான் அவர் அணுகு முறை ஆகும். மிகுந்த உணர்ச்சியோடு  அவர் நீண்ட தூரம் சென்று சர்சுகளில் நடக்கும் கேவலங்களை தோல் உரித்துக் காட்டுகின்றார்.
டில்லி ஆர்ச்பிஷப் தலித்பாதிரியார் வில்லியம் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினர். அதற்கு பதில் எழுதும்போது “சர்ச்சின் நன்கு சுவர்களுக்குள் நடக்கும் மிகப் பெரிய” ஜாதி பாரபட்சம் குறித்து தலித்பாதிரியார் வில்லியம் அவர்கள் விரிவாக குறிப்பிடு கிறார். அவர் பின்வருமாறு ஆர்ச் பிஷப்புக்கு பதில் அனுப்பி உள்ளார்.

“நான் ஒரு தலித் பாதிரியார். பிச்சைக்காரன் அல்ல. சர்ச் சபையில் இடம் கொடுங்கள் என்று நான் உங்களிடம் பிச்சை கேட்கவில்லை. மங்களூரில் இருந்து வரும் உயர் ஜாதி பாதிரியாராக நான் இல்லை. அப்படி இருந்து இருந்தால் நீங்கள் என்னை கௌரவமாக நடத்தி இருப்பீர்கள். பைபிளை பிரச்சாரம் செய்ய எனக்கு உங்களுடைய அனுமதியோ அல்லது நீங்கள் கொடுக்கும் பதவியோ தேவை இல்லை. என்னுடைய எஜமானர் ஏசுதான். நீங்கள் அல்ல. நான் இயேசுவின் அடிமை. உங்கள் அடிமை அல்ல. சர்ச் சபையில் பதவி வகிக்காமல் இருந்தாலும் கூட இதுவரை நான் செய்த சாதனைகள் எனக்கு முற்றிலும் திருப்தி அளிக்கிறது. நான் ஒரு தலித்பாதிரியார் எனவே கத்தோலிக் தலித்துகளின் கௌரவத்தை காப்பாற்றுவது எனது கடமை ஆகும்.”
இவ்வளவும் பிட்டுவைத்துவிட்டு தலித்பாதிரியார் வில்லியம் தனது கடிதத்தில் மேலும் தொடர்கிறார்.
உள்ளூரில் தலித்பாதிரியராக இருக்கும் எனக்கு தொடர்ந்து நான்கு வருடங்களாக ஏன் சர்ச்சபையில் பதவி கொடுக்கப்படவில்லை? ஆனால் இந்த மாதிரி பதவிகளை டெல்லி கத்தோலிக் சபையில் “மற்ற பாதிரிகளுக்கு” நீங்கள் கொடுத்துள்ளீர்கள். அவர்கள் எவருமே இந்த பதவிகளுக்கு தேவையான தகுதிகளை பெற்று இருக்க வில்லை. என்னுடைய திறமைகள் குறைவாக இருப்பதால் எனக்கு சர்ச்சபையில் பதவி கொடுக்கப்படவில்லை என்று உங்கள் கடிதத்தில் நீங்கள் சொல்லி உள்ளீர்கள். ஆனால் இந்த குற்றச்சாட்டு இட்டுக் கட்டப்பட்டதாகும். என்னுடைய குறைகள் என்ன என்றும் நீங்கள் சொல்லவில்லை, அவைகளை நீங்கள் நிரூபிக்கவும் இல்லை.
வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி அவர்களின் இந்த சுய சரிதை “சர்ச்சுக்குள் நடக்கும் மர்மங்களை”  நீ பெரியவனா நான் பெரியவனா என்று நடக்கும்  தனி மனிதப் போராட்டங்களை அம்பலப்படுத்துகின்றன. சர்சுகள் நடத்தப்படும் விஷயம் குறித்து அந்த புத்தகம் பல அடிப்படை கேள்விகளை எழுப்புகிறது. தலித் பாதிரியார்களுக்கு தலித் மக்களுக்கு சர்சுகளில் இழைக்கப்படும் கொடுமைகளை அவருடைய சுயசரிதை புத்தகம் பட்டியல் இடுகிறது. இந்த சுயசரிதை புத்தகம் பல விஷயங்களை அம்பலப்படுத்துகிறது. சுர்சுகளைப் பற்றி  மக்கள் கொண்டுள்ள உயர்ந்த எண்ணங்கள், கருத்துகள் எவ்வளவு தவறானவை, யதார்த்தத்திற்கு மாறானவை என்பதை வெளி கொணர்கிறது. சர்சுகளில் உள்ள செல்வாக்கு பெற்ற சிலர் எவ்வாறு “நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர் ” என்பதையும் தலித் பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி அவர்களின் சுயசரிதை புத்தகம் வெளிப்படுத்துகிறது .”
டொமினக் இமானுவேல் என்னும் மற்றொரு பாதிரியைப் பற்றி எழுதும்போது தலித்பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி இவ்வாறு குறிப்பிடுகிறார்.
பிற மொழிகளில் டப்  செய்ய அந்த படத்தை டொமினிக் தயாரித்தார். இதற்கான வரவு செலவுகள் அவரிடம் உள்ளன. அதை டில்லி கத்தோலிக்  அசோசியேஷன்  வலைதளத்தில் அவரை போட சொல்லுங்கள். வரவு செலவு கணக்குகளை அவர் வலைதளத்தில் பிரசுரித்துதான் தீரவேண்டும். இந்த படத்தை தயாரிக்கும் போது “சத்பாவனா” என்ற இயக்கத்தின் பேரும் அதில் சேர்க்கப்பட்டது ஏன் இப்படி செய்யப்பட்டது? இந்த படத்தை டொமினிக் “சேதநாலயா” என்ற அமைப்புக்காக மட்டும்தானே தயாரித்தார்? சத்பாவன  இயக்கம் இந்த படத்தை தயாரிக்க பணம்  கொடுத்ததால் அதன் பெயர் சேர்க்கப்பட்டது என்று டொமினக்  சிலரிடம் கூறியுள்ளார். இது எனக்கு தெரிய வந்துள்ளது.
இதில் இருந்தெல்லாம் என்ன தெரிகிறது? சர்ச்சுக்கு வரும் வரவு செலவுகளுக்கு சரியான கணக்கு இருக்க வேண்டும். இதற்க்கான பெரிய தேவை உள்ளது. இது முற்றிலும் உண்மையான கோரிக்கை ஆகும். இம்மாதிரியே தான் எழுதிய சுச சரிதையில் ஒரு இடத்தில் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி  பாதிரியார் ஒரு சுவாரஸ்யமான  சம்பவத்தை குறிப்பிடுகின்றார். அந்த சம்பவத்தால்தான் அவரது சுயசரிதைக்கே “வேண்டப்படாத பாதிரியார்” என்று பெயர் சூட்டப்பட்டது. அந்த சம்பவம் என்ன தெரியுமா?
“நான் ஒரு வேண்டப்படாத, விரும்பப்படாத பாதிரியார். ஏன் என்றால் நான் ஒரு உள்ளூர் தலித்பாதிரியார். ஒரு நாள் நான் வேறு ஒரு பாதிரியருடன் மிகவும் சூடாக விவாதித்துக் கொண்டு இருந்தேன். விவாதம் மிகவும் உச்ச கட்டத்திற்கு போனது. அப்போது அந்த பாதிரியார் என்னைப் பார்த்து “நீங்கள் வேண்டப்படாத பாதிரியார் ” என்று சொன்னார். அதையே தன் சுயசரிதைக்கு தலைப்பாக வைத்து விட்டார்.
தலித்பாதிரியாரின் இந்த புத்தகம் தலித்சகோதரர்களைக் குறித்து சிந்திக்குமாறு ஹிந்து சமூகத்தையும் தூண்டுகிறது. தலித்துகள் சமூக மரியாதையை, சமமான நடத்தையை எதிர்பார்த்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறுகின்றனர் என்று சொல்லப் படுகிறது. கிறிஸ்துவர்களாக மதம் மாறிய பிறகு தங்களுக்கு விடுதலை கிடைத்து விட்டதாக தலித்துகள் நம்புகின்றனர். ஆனால் சர்ச் அமைப்பில் “பாரபட்சம் காட்டுவது” என்பது மிகவும் நாசூக்காக நடக்கிறது. எனவே கிறிஸ்துவர்களாக மாறிய பிறகும் கூட தலித்துகளுக்கு  நிவாரணம் எதுவும் கிடைப்பதில்லை. இந்த நிலை காரணமாக வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி போன்ற தலித்கிறிஸ்துவ பாதிரியார்களின் நிலைமை இன்னும் மோசமாக பரிதாபமாக போகிறது. அவரைப் போன்றவர்களுக்கு பாதிரியார்களாக தொடர்வது அனேகமாக இயலாது என்ற நிலைமை உருவாகிறது.
தலித் பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி  பலர் கனவில் கூட சொல்ல பயப்படும் அல்லது ஒப்புக் கொள்ள அஞ்சும் பல விஷயங்களை துணிச்சலாக தன்னுடைய சுயசரிதையில் எழுதி உள்ளார். மதமாற்றம் என்னும் கொடுமையான எதார்த்தம் உள்ளதை அவர் ஒப்புக் கொள்கிறார். அவர் எழுதுகிறார்.
“தலித் ஹிந்துக்கள் பெரும்பாலும் ஏழைகளாக இருந்தனர். ஏழைகளாக இருக்கின்றனர். ஏன் என்றால் உயர்ஜாதி ஹிந்துக்களால் அவர்கள் சுரண்டப் பட்டனர். இப்போதும் சுரண்டப்படுகின்றனர். அவர்கள் கீழ்த்தரமான வேலைகளை, பணிகளை செய்து கொண்டு இருந்தனர். இப்போதும் செய்து கொண்டு உள்ளனர். அவர்கள் கிறிஸ்துவர்களாக  மதம்மாறிய பிறகும் தலித் கிறிஸ்துவர்கள் கத்தோலிக் சர்ச்சின் அதிகாரிகளால் சுரண்டப்பட்டனர். இப்போதும் சுரண்டப்படுகின்றனர். கிறிஸ்துவர்களாக மதம் மாறிய பிறகும்  ஹிந்து   தலித்துகளின்  நிலைமை மேன்மை அடையவில்லை. முன் இருந்த மாதிரியேதான் மோசமாக உள்ளது. ஹிந்து சமூகத்தில் இருந்த போது தலித் ஹிந்துக்கள் உயர்ந்த நிலைக்கு வர உயர்ஜாதி ஹிந்துக்கள் அவர்களை அனுமதிக்க வில்லை. தலித்கத்தோலிக்கர்களின் பொருளாதார நிலைமை மேம்பாடு அடைந்த தாக இருக்கவில்லை. இப்போதும் மேம்பாடு அடையவில்லை. தலித் கத்தோலிக்கர்களின் வாழ்க்கைத்தரம், சர்ச்சிலோ, வட இந்தியாவிலோ, கிறிஸ்தவர் களாக மதம்மாறிய பிறகு கூட மோசமாகத்தான் இருந்தது. இப்போதும் மோச மாகத்தான் இருக்கிறது.
மேலும் தலித்பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி அவர்களின் புத்தகம் சர்சுகளில் இருக்கும் இன்னும் சில பாரபட்சங்களைக் குறித்தும்  விவரம் தருகிறது. சர்சுகளில் “தென்னிந்தியர்கள் ஆதிக்கம்” அதிகமாக இருப்பதாக அவர் சொல்கிறார். டில்லி ஆர்ச் டியோசாஸ்  தென்னிந்தியர்கள் குறித்தே அதிக கவனம் மற்றும் அக்கறை காட்டுவதாக தலித்பாதிரியார் குறிப்பிடுகிறார். கத்தோலிக் நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் தென்னிந்தியர்கள்தான்  இருக்கின்றனர் என்று அவர் சுட்டிக் காட்டுகிறார். அதே சமயத்தில் உள்ளூர் வாசிகளுக்கும், தலித்துகளுக்கும் சர்ச்களில் அவர்களுக்கு உரிய உரிமைகள் கொடுக்கப்படுவ தில்லை. தங்களுடைய கத்தோலிக்க எஜமானர்களுக்கு அவர்கள் ஏறக் குறைய அடிமைகள் மாதிரிதான் உள்ளனர்.
பிரச்சனைகள் பல மட்டங்களில் உள்ளன. சர்ச்சின் வலிமை, யேசுவிடம் தங்கள் நம்பிக்கையை வைத்துள்ள மிக அதிகமான தலித்துகள் மற்றும் வனவாசி மக்களையே சார்ந்து உள்ளது. ஆனால் சர்ச்சின் கட்டமைப்பு உயர் ஜாதி, பணக் காரர்களை சார்ந்ததாக உள்ளது. இது மாற்றப்பட வேண்டும். இது மாற்றப் படாத தால்தான்  “போராட்ட அலைகள்” எழும்பத் தொடங்கி உள்ளன. தலித்பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரியின் புத்தகம் “ஏழை கிறிஸ்துவர்கள் விடுதலை இயக்கம்” குறித்து பேசுகிறது. இந்த அமைப்பு தலித் கிறிஸ்தவர்களின் பிரச்சனைகள் குறித்து வலிமையாக அணுகுகிறது. தலித்பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி  அவர்கள் தன்னைக் குறித்து எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கு  விடை அளிக்க சரியான இடத்தைத்தான் தெரிவு செய்துள்ளார்.
தலித்துகளும் வனவாசிகளும் “வெள்ளை அங்கிகளுக்கு பின்னால்” பல “கருப்பு பிரச்சனைகளை அனுபவித்துக் கொண்டு உள்ளனர்”. இதை எல்லாம் சமய நம்பிக்கை கொண்டவர்கள், சமய நிறுவனங்கள், அரசாங்கம், அதிகாரவர்க்கம், நீதித்துறை, எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஊடகங்களில் பணி செய்வோர் ஆகியோர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு தலித்பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி அவர்களின் சுயசரிதை புத்தகம் “வேண்டப்படாத பாதிரியார்” மிகவும் உபயோகமாக இருக்கும். “மதமாற்ற அரசியல்” பற்றி தெரிந்து கொள்ள புரிந்து கொள்ளவும் இந்த புத்தகம் உதவும். தலித்துகளும், வனவாசிகளும் பொருளாதார முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே இந்தியாவில் சமூக மாற்றம் வரும், சாத்தியமாகும். வெறும் மதமாற்றம் அவர்களின் நிலையை எந்த விதத்திலும் உயர்த்தாது. இந்த எதார்த்தத்தை அனைவரும் புரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.
இக்கட்டுரையின் ஆங்கில மூலத்தைப் படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்.http://organiser.org//CAT/In%20Focus_82918.aspx? NB=&lang=4&m1=&m2=&p1=&p2=&p3=&p4=&PageType=N

நன்றி :-https://devapriyaji.wordpress.com

புனித தோமா


 


புனித தோமா  @ புனித தோமையர்


@ தாமஸ் எனப்படும் தோமோ

 இயேசுவின் இந்திய சீடர் 


பழைய ஏற்பாடு பல கடவுள் வழிபாடு கொண்டது. யகொவா என்பவர் இஸ்ரேலுக்கு ஆன சிறு எல்லை தெய்வமே.
பழைய ஏற்பாடு முழு முதல் கடவுல் பெயர் எல்சடை- இது தமிழ் ஆகும்.

இயேசுவின் மாணாக்கர்களில் முக்கியமானவரான புனித தோமையர் [St.Thomas] பற்றி விவிலியம் போதுமான அளவுக்கு செய்திகளை அளிப்பதில்லை. கத்தோலிக்க கலைக்களஞ்சியத்தில் தேடினால் தாமையரைப்பற்றி மிகச்சில குறிப்புகளே காணப்படுகின்றன. தாமையரின் பெயர் திருச்சபை அங்கீகரித்த நான்கு இறைச்செய்திகளிலும் மீண்டும் மீண்டும் வருகிறது. அவரது தெளிவான சித்திரத்தை அளிப்பது நான்காவது இறைச்செய்தியாளரா யோவானில்தான். இவர் தாமஸ் யூதாஸ் திதியோன் என்று சொல்லப்படுகிறார். இரட்டையரில் ஒருவன் என்ற பொருளில்...............

தோமையர் யோவானின் இறைச்செய்தியில் இயேசு மேல் அழுத்தமான பிடிப்பும் துணிவும் கொண்ட முதல் மாணாக்கராகச் சொல்லப்படுகிறார். இயேசு லாஸரசை காணும் பொருட்டு ஜுதேயாவுக்கு மீண்டும் செல்லும் நோக்கத்தை அறிவித்தபோது இவர்தான் மற்ற மாணவர்களிடம் ”நாமும் கூடவே செல்வோம். ஒருவேளை நாமனைவருமே கொல்லப்படலாம்”என்று சொன்னார்.[யோவான் எழுதிய இறைச்செய்தி 11-16] .மேலும் தோமையர் எளிதில் நம்பிவிடாதவராகவும் தருக்கம் சார்ந்து எதையும் ஆராய்பவராகவும் இருந்தார். இவரே ஏசுவின் இறுதி உணவின்போது அவர் மீது ஐயத்தை எழுப்பினார். ”தோமையர் ஏசுவிடம் சொன்னார். ”கர்த்தரே நீங்கள் ஆவியா அல்லவா என்று நாங்கள் அறியோம். அதை நாங்கள் எப்படி தெளிவுபடுத்திக் கொள்வது?” [யோவான் எழுதிய இறைச்செய்தி 14:5] .



ஆனாலும் தாமஸ் கிறிஸ்து உயிர்த்தெழுந்து வந்தபோது கேட்ட கேள்வியால்தான் வரலாற்றில் நிற்கிறார். ”அவரது கைகளில் ஆணி அறையப்பட்ட துளைகளை கண்ணால் கண்டு அவற்றில் என் விரல்களை விட்டாலொழிய நான் அதை நம்பமாட்டேன்” என்று அவர் அடம்பிடித்தார்.[யோவான் எழுதிய இறைச்செய்தி 20:25] ஆனால் எட்டு நாட்கள் கழித்து அவர் விசுவாசம் பெற்றார். அதற்காக ஏசு அவரைக் கடிந்துகொண்டார். ” நீ என்னைக் கண்டதனால் என்னை நம்பினாய் தாமஸ். ஆனால் காணாமலேயே நம்பியவர்கள் எவரோ அவர்களே அருள்கூரப்பட்டவர்கள்” [ யோவான் எழுதிய இறைச்செய்தி 20:29].இக்காரணத்தால் இவர் ஐயப்பட்ட தாமஸ் [ Doubting Thomas] என்று அழைக்கப்பட்டார். மேலைநாடுகளில் , குறிப்பாக புரட்டஸ்டண்ட் மதத்தில், தோமையர் ஒரு படி குறைந்தவராகவே இனம்காணப்படுகிறார்.





Image result for st . thomasதாமஸ் என்ற பேர்குறித்தே ஏராளமான கிறித்தவ இறையியல் சார்ந்த ஊகங்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் முதன்மையான ஆவணம் என்பது கிரேக்க மொழியிலும் சிரியக் மொழியிலும் சிற்சில பாடபேதங்களுடன் பேணப்பட்டுவரும் ‘தோமையரின் செயல்பாடுகள்’ [Acta Thomae] முக்கியமான ஆவணமாகும். அது பார்டசேன்ஸ் எழுதியதாக இருக்கலாம்[Bardesanes] கிபி 220க்கு முன்பாக எழுதப்பட்ட இவ்வாவணம் ஹரானக் [Harnack] ஆல் தன் குறிப்புகளில் [Chronologie, ii, 172] சான்றளிக்கப் பட்டுள்ளது. ஆனால் இதன் உண்மையான பிறப்பிடம் எடேசா ஆகும். [Edessa] அங்கு தாமஸ் கீழைநாட்டில் கொல்லப்பட்டபின் கொண்டுவரப்பட்ட எலும்புகள் வைக்கப்பட்டு வணங்கப்பட்டதாக தெரிகிறது. இது தோமையரின் எலும்புகள்தான் என்பதற்கான ஆதாரம் என்னவெனில் அவர் இரு இடங்களில் ஏசுவின் இரட்டைச் சகோதரர் ஆக குறிப்பிடப்படுகிறார் என்பதே. யூதாஸ் தாமஸ் என்று சிரியக் மொழியில் சொல்லப்படும் தாமஸ் கிரேக்க மொழியில் திதிமோஸ் [இரட்டையர்] என்று சொல்லடுகிறார். இவை ஒரே பொருள் கொண்டவை.

இறையியலாளாரான ரெண்டல் ஹாரிஸ் இந்த எலும்புவழிபாடானது இது எடெஸாவில் இருந்த ஏதோ புறச்சமய [pagan] வழிபாட்டு முறையானது கிறித்தவத்துக்குள் ஊடுருவியதன் விளைவு என்கிறார். அவர் எடெஸாவிற்கு தாமஸின் எலும்புகள் வந்தது குறித்து கூறும் கதை இது. கிறிஸ்துவின் இறப்புக்குப் பின்னர் அவரது மாணாக்கர்கள் உலகைப் பகுத்துக்கொண்டு சமயப்பரப்புநர்களாக [அப்போஸ்தலர்] கிளம்பிய போது தாமஸின் கணக்குக்கு வந்தது இந்தியா. தாமஸ் இந்தியா செல்ல விரும்பவில்லை. அப்போது ஆவி வடிவில் வந்த ஏசு அபான்[Abban] என்ற இந்தியக்கப்பலில் தோன்றி அதன் உரிமையாளரான குந்த·பார்[Gundafor] என்ற மன்னனுக்கு தாமஸை ஆசாரி வேலைசெய்யும் அடிமையாக விற்கச்செய்தார். அவ்வாறாக தாமஸ் அன்டிராபாலிஸ்[Andrapolis] என்ற இந்திய துறைமுகத்துக்கு வந்துசேர்ந்தார். அங்கு அவர் மன்னனுக்கு ஓர் அரண்மனைகட்டும் பணியில் அமர்த்தப்பட்டார். அப்பணத்தை தாமஸ் ஏழைகளுக்கு செலவழித்தார். மன்னன் அவரை சிறையிலடைக்க அவர் ஏசுவின் அருளால் தப்பினார்.அந்த அற்புதத்தை அறிந்த குந்த·பார் மதம் மாறி கிறித்தவர் ஆனார். அங்கே பலரை மதம் மாற்றியபின் தாமஸ் இன்னொரு நாட்டுக்குச் சென்றார். போகும் வழியில் பலவிதமான மாயமிருகங்களையும் பேய்களையும் அவர் சந்தித்தார்.
மிஸ்தாய் [Misdai சிரிய மொழியில் [Mazdai] என்ற மன்னனின் நாட்டுக்கு அவர் வந்து சேர்ந்தார். அவனது மனைவி டெரிஷியாவையும் மகன் வாஸனையும்[Tertia/ Vazan] அவர் மதம் மாற்றினார். ஆகவே அவர் சிறைப்பிடிக்கப்பட்டு மரண தண்டனைக்கு விதிக்கப்பட்டார். நகர் அருகே இருந்த குன்றுக்கு அவர் கொண்டுசெல்லபப்ட்டு கொல்லப்பட்டார்.அவரதுச் சடலம் புராதன மன்னர்களின் கோபுரத்தின்கீழ் அடக்கம் செய்யபபட்டது. பிற்பாடு அவரது ஆதரவாளர்களால் அவரது எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்டு எடெஸாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டது.




Image result for st thomas mount chennaiImage result for st thomas mount chennai




இங்கு குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் கிபி 46ல் இமைய மலைக்கு தெற்கே ஆ·ப்கானிஸ்தான், பலுசிஸ்தான், பஞ்சாப் மற்றும் சிந்த் பகுதியை ஆண்டிருந்த மன்னனின் பேர் கோண்டோ·பெர்னிஸ் என்று கிரேக்க மொழியிலும் குது·பாரன் என்று அம்மொழியிலும் சொல்லப்பட்டது. [Gondophernes/Gudupharan] நாணயங்கள் மூலமும் கிரேக்க தொன்மக்கதைகள் மூலமும் இது ஓரளவுக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியின் மொழியான காரோஸ்தி [Kharoshthi ]யிலும் ஐதீகங்கள் காணப்படுகின்றன. இது ஏற்கனவே கண்ட மன்னந்தான் என்பதில் பெரிதும் விவாதமில்லை. தக்த்- இ- ·பாய் [Takht-i-Bahi] கல்வெட்டுகளின்படி அம்மன்னன் கிபி 20 முதல் கிபி 46 வரை ஆண்டான் என்பது நிபுணர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. மிஸ்தாய் என்பது இந்து பேர் ஈரானிய மொழிக்கு மாறியதாக இருக்கலாம். அப்படியானால் அது மதுராவை ஆண்ட வாசுதேவன் ஆக இருக்கலாம். கனிஷ்கருக்கு அடுத்தபடியாக பட்டத்துக்கு வந்த மன்னர் அவர். சிலபெயர்கள் பொருளில்லாதபடி உருவாக்கப்பட்டவையாகவும் இருக்கலாம்
ஆனால் தோமையர் இந்தியாவின் தெற்கே மேற்குக்கடற்கரைக்கு வந்தார் என்றும் இங்கேயே கொல்லப்பட்டார் என்றும் மிக தீவிரமான நம்பிக்கை உள்ளது. 1955 டிசம்பர் 18 ல் இந்திய தலைநகர் டெல்லியில் தோமையர் தினம் கொண்டாடப்பட்டபோது அப்போதைய இந்திய ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் சொன்னார் ” புனித தோமையர் இன்று கிறித்தவ நாடுகளாக இருக்கும் பல நாடுகள் தோன்றுவதற்கு முன்னரே இந்தியக்கடற்கரைக்கு வந்தார். அவரிடமிருந்து தங்கள் கிறித்தவப் பாரம்பரியத்தை தொடங்கும் இந்திய கிறித்தவர்கள் ஐரோபிய நாட்டுக் கிறித்தவர்களைவிடவும் பழைமையானவர்கள் ”



Image result for st . thomasதோமையர் இந்தியா வந்து பத்தொன்பது நூற்றாண்டு தொடங்குவதை ஒட்டிய கொண்டாட்டத்தின் பகுதியாக புனித பாப்பரசர் பன்னிரண்டாம் பயஸ் 1952 டிசம்பர் 31ல் அனுபிய ரேடியோ செய்தியில் இவ்வாறு சொன்னார். ” புனித தோமையர் இந்தியா வந்து 1900 வருடங்கள் தாண்டிவிட்டன. பிந்திய பல நூற்றாண்டுக்காலம் இந்தியா மேற்கிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தது. ஆயினும் இந்தியா தன்னுடைய முதல் அப்போஸ்தலரின் பாரம்பரியத்தை பேணிக்கோண்டது . இந்த அப்போஸ்தலரின் வழித்தோன்றல்களாக இன்று இந்தியாவில் உள்ள தோமையர் கிறித்தவ மக்களுக்கு எங்கள் சபையின் வாழ்த்துக்கள் ”

Image result for st thomas mount chennai
 Image result for st thomas mount chennaiImage result for st thomas mount chennaiImage result for st thomas mount chennai
ஆனால் தோமையர் இந்தியா வந்தது உண்மையா என்ற ஐயம் வலுவானதே. காரணம் ஒன்று தோமையரின் வருகை இன்றும் ஓர் ஐதீக கதையாகவே உள்ளது. தோமையரின் வருகைக்கு ஆதாரமாகக் காட்டப்படும் எல்லா அமைப்புகளும் காலத்தால் மிகவும் பிற்பட்டவை.

மரபான நம்பிக்கைகளின்படி ஏசுவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தாமையர் கிபி 52ல் இந்தியாவுக்கு வந்தார். கேரளத்தில் அன்றிருந்த முக்கிய துறைமுகமான கொடுங்கல்லூரில் இறங்கினார். இது கொடுங்கோளூர் என்றும் வஞ்சி என்றும் அழைக்கபப்ட்டிருந்த துறைமுகம். சேரர்களின் பண்டைய தலைந்நகரம். சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கோயில் எடுத்த இடம் இதுவே என்று ஆதாரபூர்வமாக சொல்லப் படுகிறது. அந்த கண்ணகி ஆலயமே இன்றுள்ள கொடுங்கல்லூர் தேவி கோயில் என்று வரலாறு கூறுகிறது. தாமையர் கேரள பிராமணர்களுக்கு ஏசுவின் நற்செய்தியைச் சொன்னார் என்றும் அவர்களில் பலர் மதம் மாறினார்கள் என்றும் கூறப்படுகிறது.

 அவர் ஏழு திருச்சபைகளை கேரள மண்ணில் உருவாக்கினாராம். அவை முறையே கொடுங்கல்லூர், கோட்டக்காவு, பாலயூர், கொல்லம், கோக்கமங்கலம், நிரணம் சேறயில் ஆகியவை. அவர் மலயாற்றூர் குன்றுகளுக்கு வந்து ஜெபம் செய்யும் பழக்கம் கொண்டிருந்தார் என்றும் சொல்லபப்டுகிறது. அதன் பின் அவர் கிழக்கு கடற்கரைக்கு இடம் பெயர்ந்தார். கிபி 72ல் அவர் சென்னைக்கு அருகே உள்ள புனித தோமையர் குன்று என இன்று அழைக்கப்படும் குன்றில் வாழ்ந்த போது ஒரு மதவெறியனால் கொல்லப்பட்டார். அவரது உடல் மைலாப்பூருக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கே அவர் அடக்கம் செய்யபப்ட்டார். இன்றும் அவரது சமாதி அங்கே வழிபடப்படுகிறது.
உண்மையில் தோமையர் வந்திருக்க வாய்ப்புள்ளதா? உண்டு. அன்றைய கேரளக் கடற்கரைக்கும் மத்திய ஆசியாவுக்கும் இடையே நெருக்கமான உறவு இருந்தது. யவனர்களும் அராபியர்களும் தொடர்ந்து வணிக நோக்கத்துடன் கேரளத்துக்கு வந்தபடி இருந்தனர். இக்கடற்கரையில் இன்றும் குவியல் குவியலாக நாணயங்கள் கிடைத்தபடியுள்ளன. அதிகமும் ரோமாபுரி நாணயங்கள். அதற்கும் முன்பு கிமு 970 முதல் 930 வரை ஆண்ட இஸ்ரேலரின் சாலமோன் மன்னரின் மரக்கலங்கள் கேரளக் கடற்கரைக்கு வந்தபடி இருந்தன. அதற்கு புராதன பழைய ஏற்பாடு பைபிளிலேலேயே ஆதாரங்கள் உள்ளன. முசிரிஸ் என்று அப்போது குறிக்கப்பட்ட கொடுங்கல்லூரில் இருந்து முத்தும் மணிகளும் கோண்டுவரப்பட்டு மன்னருக்குப் படைக்கப்பட்டன. கேரளக்கடற்கரையிலிருந்து பெறப்பட்ட மிளகு முதலிய நறுமணப்பொருட்கள் அக்காலம் முதலே ஐரோப்பாவுக்கும் மத்திய ஆசிய நாடுகளுக்கும் மிகமிக பிரியமானவையாக இருந்தன. ரோமாபுரி பயணியும் வரலாற்றாசிரியருமான ப்ளினி [கிமு 23-79] ஒவ்வொரு வருடமும் பொன்னாகவும் மணியாகவும் பெருஞ்செல்வம் கேரளத்துக்குச் செல்வதைப்பற்றி வருந்தி எழுதியிருக்கிறார்.மலபார் பகுதிக் கப்பல்கள் பாரசீக வளைகுடா கடந்து சென்று வணிகம் செய்வதைப்பற்றியும் அவர் எழுதியுள்ளார். ப்ளினியைப்போலவே டாலமி [கிமு 100-160) மற்றும் பெரிப்ளூஸ் ஆகியோரும் சேரக்கடற்கரைக்கு மேலைநாடுகளுடன் இருந்த நெருக்கமான உறவைப்பற்றி எழுதியுள்ளனர். முதல் நூற்றாண்டுமுதலே கேரளத்தில் மட்டாஞ்சேரி என்ற இடத்தில் யூத குடியிருப்புகள் உருவாகிவிட்டன. சமீபகாலம் வரை யூதர்கள் ஒரு தனிச்சமூகமாக அங்கிருந்தனர்.அவர்களின் கோயிலும்[சினகாக்] அங்குள்ளது
இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்டிருக்க வாய்ப்புள்ள யூதாஸ்- தாமஸ் குறிப்புகளின் படி முதல் நூற்றாண்டின் இறுதியில் புனித தோமையர் தன் சுவிசேஷங்களை குண்டபேர்ஸ் என்ற பார்த்திய மன்னரின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் செய்துகொண்டிருந்தார் .[Gundaphares,Parthian]. பாண்டிய மன்னரின் நிலமா இது என ஆராயலாம். இலக்கிய ஆதாரங்கள் தவிர இன்றும் எஞ்சும் தோமையர் மரபு கிறித்தவர்களின் [மார்த்தோமா கிறித்தவர்கள்] சமூகம் அவரது வருகைக்கான சிறந்த ஆதாரமாகும். இவர்கள் பாலையூர் , அர்த்தாடு, நிலம்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து கேரளம் முழுக்க பரவினார்கள். மயிலாப்பூரில் உள்ள தோமையரின் சமாதியும் பறங்கிமலை கோயிலும் இன்றும் உள்ளவை. இப்புனித அப்போஸ்தலரின் எலும்புகள் எடெஸ்ஸா என்ற என்ற ஊருக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

பிற ஆதாரங்கள்

ஈஸி·பஸ் [ Eusebius, கிபி நாலாம் நூற்றாண்டு] புனித ஜெரோம் [St. Jerome, கிபி342-420] ஆகியோரின் குறிப்புகளில் பாண்டேனியஸின் [Pantaenus] பயணம் பற்றி சொல்லப்பட்டுள்ளது. இவர் அலக்ஸாண்டிரியாவின் பிஷப் டிமிட்றியஸ் மூலம் இந்தியாவின் பிராமணர்களுக்கு கிறித்தவ மதத்தை கற்பிக்கும்பொருட்டு அனுப்பபட்டவர் . கிபி 190ல் எழுதப்பட்ட இக்குறிப்புகளில் சில மேலதிக ஆதாரங்கள் கிடைக்கின்றன. மேலைக்கடற்கரையில் வாழ்ந்த தாமையர் மரபு கிறித்தவர்களைப்பற்றி இவற்றில் சொல்லப்பட்டுள்ளது. புனித எ·ப்ரம் [St. Ephrem கிபி306-373] புனித கிரிகோரி [St. Gregory of Nazianze கிபி 324-390 ] புநித அம்புரோஸ் [ St. Ambrose கிபி 333-397] புனித ஜெரோம் [St. Jerome ஆறாம் நூற்றாண்டு] புனித கிரிகோரி [St. Gregory of Tours ஆறாம் நூற்றாண்டு] ஆகியோரின் குறிப்புகளிலெல்லாம் இந்தியாவில் கிறித்த்வம் இருந்தமைக்கான சான்றுகளும் தோமையர் பற்றிய குறிப்புகளும் உள்ளன என்று சொல்லப்படுகிறது.

ஆனால் தாமஸ் இந்தியாவில் ஊழியம்செய்தார் என்பதற்கோ கணிசமான இந்தியக் கிறித்தவர்கள் நம்புவதுபோல அவர் மேற்குக் கடற்கரையில் இறங்கி கிழக்கு கடற்கரையில் இறந்தார் என்பதற்கோ அவரை சென்னை மைலாப்பூருடன் தொடர்புபடுத்துவதற்கோ உறுதியான சான்றுகள் ஏதுமில்லை என்று சொல்லும் ஆய்வாளர்களும் உள்ளனர். எ·ப்ரம் சிரியக் , புனித கிரிகோரி , புனித அம்புரோஸ்,புனித ஜெரோம், புனித கிரிகோரரி ஆகியோர் இதைப்பற்றிய மேலோட்டமான குறிப்புகளை விட்டுச்சென்றிருந்தபோதும்கூட அவை போதுமான ஆதாரங்களாக இல்லை. ஆனால் சென்னை பறங்கிமலை அல்லது புனித தோமையர் மலையில் கல்லாலன ஒரு சிலுவை உள்ளது. இதில் ·ப்லாவி [Pahlavi ] என்னும் தொன்மையான பெர்சியன் மொழியில் அமைந்த கல்வெட்டு உள்ளது. இது ஏழாம்நூற்றாண்டுக்கு முற்பட்டது. சிரியமொழிச்சடங்குகளையும் சிரிய வேர்களையும் கொண்ட ஒரு கிறித்தவ சமூகம் மேலைக்கடற்கரையில் காணப்படுவதும் உண்மையே. இவர்கள் சிரியன் கிறித்தவர்கள் எனப்படுகின்றனர். இந்த சர்ச் உண்மையிலேயே புனித தாமஸ் அவர்களால் உருவாக்கப்பட்டதா என்பது இன்னும் குழப்பமானதே.
கிபி 325ல் நடந்த நைஸியா கவுன்ஸிலில் [Council of Nicea ] சிரிய-கால்டியன் பிஷப் ஒருவர் இந்தியா மற்றும் பாரசீகத்துக்கான பிஷப்பாக கலந்துகொண்டமைக்கு சான்று உள்ளது. அப்போதே இந்தியாவில் கிறித்தவர்கள் இருந்திருக்கக் கூடும். ஆனால் அவர்கள் தாமஸ் அவர்களால் மதம் மாற்றப்பட்டவர்களா? கிபி 745ல் தாமஸ் கானா [Thomas Cana] என்னும் போதகரின் தலைமியில் ஒரு சிரிய மதமாற்றக்குழு கேரளக்கடற்கரையில் பணியாற்றியுள்ளது. அவர் பேரைத்தான் புனித தோமையர் என்றுஙிங்குள்ள கிறித்தவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். அவர் கேரள மரபில் க்னாயி தொம்மன் என்று சொல்லபப்டுகிறார். இவ்வாறு இவ்விவாதம் தொடர்ந்து நடைபெறுகிறது. வரலாற்றாதாரங்களை விடவும் நம்பிக்கைகளுக்கே இங்கு அதிக முக்கியத்துவம் உள்ளது.
கத்தோலிக்க சபையால் உறுதியாகச் சொல்லப்பட சாத்தியமான தகவல் என்னவென்றால் ஆறாம் நூற்றாண்டு அளவில் காஸ்மோஸ் இண்டிகோப்லெய்ஸ்டஸ் [Cosmas Indicopleustes] மலபார் கடற்கரையில் [Male] கிறித்தவர்கள் இருந்தனர் அவர்களின் பிஷப் பாரசீகத்தில் பட்டமேற்றார் என்று குறிப்பிடுவதாகும். தோமையரின் எலும்புகள் நாலாம் நூற்றாண்டுவரை எடெஸ்ஸாவில் இருந்தன என்பதற்கு சான்று உள்ளன. அவை அங்கிருந்து சியோஸ் [Chios]க்கு 1258ல் கொண்டுசெல்லபப்ட்டு அங்கிருந்து ஒர்டொனா [Ortona]வுக்கு கொண்டுசெல்லபப்ட்டதாக ஆதாரபூர்வமாகச் சொல்ல முடியும். ஒரு தவறான புரிதலின் அடிப்படையில் தாமஸ் அமெரிக்காவுக்குச் சென்றதாக சிலர் நம்புகிறார்கள்.
ஆக்டா தோமா [Acta Thomae] வின் சுருக்கமான வடிவம் எதியோப்பிய மொழியிலும் லத்தீனும் உள்ளது. தோமையரின் சுவிசேஷம் என்ற வடிவில் எகிப்தில் காப்டிக் மொழி வடிவில் கிடைத்துள்ள நூலை கத்தோலிக்க திருச்சபை அங்கீகரிக்கவில்லை. தோமையரின் வெளிப்பாடுகள் [Revelatio Thomae] என்ற பேரில் கிடைக்கும் நூல் பாப்பரசர் கெலசியஸ்[ Pope Gelasius]அவர்களா இறைமறுப்பு என்று விலக்கப்பட்டது. அதன் பல சிதைந்த வடிவங்கள் இப்போது பல இடங்களில் கிடைக்கின்றன.
ஆய்வாளர்களைப் பொறுத்தவரை புனித தாமையர் யார், அவர் இந்தியாவுக்கு வந்தாரா, இல்லையென்றால் கிழக்கே வந்த அவர் உண்மையில் எங்கு கிறித்தவச் செய்தியை பரப்பினார் என்பதெல்லாம் இன்றும் மர்மங்களே.


அவரது இறைச்செய்தி பிற்பாடு கிறித்தவ தேவாலய அதிகார அமைப்பால் அங்கீகரிக்கபபட்ட இறைச்செய்திகளிலிருந்து தத்துவார்த்தமாக மாறுபட்டிருந்தது என்று இப்போது தெரிகிறது. அதனால்தான் அவர் வரலாற்றில் இருந்து மறைந்து போனாரா என்ன?


Image result for st thomas mount chennai