தமிழ்நாடு பயணர் சங்கம்

தமிழ்நாடு பயணர் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது !!... இறைவன் படைத்த இந்த இனிய உலகில் பயணம் செய்யலாம் வாங்க ..
உங்களின் மேலான கருத்துகளை மிகுந்த உவகையுடன் எதிர்பார்கிறேன் ..
அன்புடன் உங்கள் ராம்கி

என்னை பற்றி...

salem, tamilnadu, India
Tamilnadu Trekking Club(TTC) காடுகளின் ஊடாக களபயணம் மேற்கொள்ளுவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் .என்னுடன் பயணிக்க ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும் .

Thursday 22 August 2013

சதுரகிரி-பகுதி -6

சதுரகிரி-பகுதி -6

இந்த தாணிப்பாறை கருப்ப சாமி கோவிலில் இருந்து மீண்டும் நமது சதுரகிரி மலை பயணம் தொடர்கிறது ,

நான் ஏற்கனவே சொன்னது போல இந்த கருப்ப சாமி கோவிலின் எதிரில் உள்ள சதுரகிரிக்கு  பாதையை அமைத்த பச்சையம்மாள் என்ற சிவ பக்தையின் சமாதிக்கு பின்புறம்  உள்ள காட்டு பகுதியில் காலைகடன்களை முடித்து அருகில் உள்ள  சிறிய தடாகத்தில் குளித்துவிட்டு...

  பின்னர் கருப்ப சாமியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்து நமது பயணத்தை தொடர எத்தனிக்கையில் ,

 நமது நண்பர் வெங்கடேஷ் என்பவர் இந்த கருப்ப சாமி கோவிலின் தற்போதைய பூசாரியிடம் இந்த தலம்  பற்றியும் அதன் வரலாறு பற்றியும் நமக்கு கூறவேண்டும் என கேட்டுக்கொண்டதற்க்கு இணங்க அவரும் உற்சாகமாக தலபுராணம் செய்தருளினார் ,........


(இந்த கோவிலின் பூசாரிகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை அதாவது 6 மாதம் 1 வருடம் எனதங்களுக்குள் முறைவைத்து 
மாறிக்கொண்டே இருப்பர் என்பது ஆச்சரியமான விசேடம் )

........ஆவலுடன் கேட்டு பின்னர் நடையை கட்டினோம் , ஆரம்பமே 
அருமை சுற்றிலும் காட்டு புதர்கள் இடதுபுறம் கௌண்டனிய  காட்டாறு சலசலத்துக்கொண்டு ஓடுகிறது ,...வலதுபுறம் மலைக்குன்று... எதிரே காடு ,... சரி பாதை ?.........













.......அதுதான் நம் முன்னால் நீண்டு கொண்டே போகிறதே ,... சரியான காட்டு பாதை, அதில் சில இடங்களில் கற்கள் கொண்டு சில அடி தூரம் படிக்கட்டு அமைத்துள்ளனர் ,( பாதையை அமைத்த பச்சையம்மாளை நினைக்க தோன்றுகிறது) ,


அப்படியே சிறிது தூரம் போனால் .... பின்னர் இடது புறம் பாதையில்  ஒரு சிறு திருப்பம்  இப்போது நாம் கௌண்டனிய  ஆற்றை இடதுபுறம்  கடக்கிறோம் ..

..இப்போது நாம் குதிரை குத்தி பள்ளம் அல்லது குதிரை ஊற்று என்று அழைக்கப்படும் இடத்திற்க்கு வருகிறோம் ....






பின் மீண்டும் வலதுபுறம் வடக்குநோக்கி நமது பயனம்  தொடர்கிறது ....ஏன்  இந்த பெயர் வந்தது என்றால் அந்த காலத்தில் ஆங்கிலேய துரைமார்கள் அவர்களுக்கு முன்னால் நம் சிறு ,குறு,மன்னர்கள் ..? பின்னர் ஜமின் ..ஆகியோர்களின் குதிரைகள் இந்த இடம் வரை தான் வரும் ..

இந்த இடத்தில் உள்ள படிவெட்டி பாறையில் ஏற முடியாமல் திணருமாம் ...ஆகவே குதிரைகளை இங்கேயே மரத்தில் கட்டிவிட்டு .....அப்புறம் என்ன நாட்டு ராஜாக்கள் எல்லாம் நடைராஜாக்கள் தான் ...அதுதாங்க நடைபயணம் தான் சாத்தியம் என்பதைஇந்த படங்களை பார்த்தபின்  நீங்களே கண்டுகொள்வீர்கள் ...


இதோ இந்த நண்பர் இந்த பதிவேட்டி பாறை மீது ஏறுகிறார் அல்லவா  இடன் வலது புறம் ஒரு அழகிய தடாகம் உள்ளது ...கொஞ்சம் ஆழம் தான் .. மிக தூய்மையான நீர் ... நீச்சல் தெரிந்தவர்கள் நீந்தி மகிழலாம் ...மற்றவர்கள் தடாகத்தின் அருகில் செல்வதை தவிர்த்திடுங்கள் பலர் இந்த தடாகத்தில் நீச்சல் தெரியாமல்  இறந்திருக்கிறார்கள் .....(பெரும்பாலும் குடித்துவிட்டு தான் ...)





கொஞ்சம் கவனம் இந்த இடத்தில் இவ்வளவு தான் இடம்... சற்று  இடது ஓரமாக பாறையை ஒட்டி செல்வது நலம் ....


இடித்துக்கொண்டு செல்வதை தவிர்க்கவும் ....வயதானவர்கள் , பெண்கள் ,குழந்தைகளுக்கும் மேலே ஏறி வருபவர்களுக்கும் முதலிடல் தரவும் ....

இந்த குதிரை ஊற்று பகுதியில் அம்மாவாசை , பௌர்ணமி நாட்களில் வெள்ளரி பிஞ்சு ,அண்ணாச்சி பழ  தற்காலிக கடைகள் உண்டு , 

வேதனைக்குரிய விடயம் இந்த தடாகம் வரை, அருகில் உள்ள கல்லூரியில் இருந்து  இளம் ஜோடிகள் வந்து அழிச்சாட்டியம் செய்வது தான்....  

பீர், மற்றும் மதுபானங்கள் கொண்டுவந்து குடித்துவிட்டு தடாகத்தில் கும்மாளமிடுவது தற்போது அதிகரித்துவிட்டது ....

இந்த புனித மலையில் இதுபோன்ற விடயங்கள் தேவையா ?.. எல்லாம் அந்த சுந்தர மகாலிங்கத்திற்கே  வெளிச்சம் .....

இங்கிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் வருவது அத்திரி மகிரிஷி வனம் அல்லது அத்தி ஊற்று.. சங்கிலி பாறை  என்று பலவாறு  அழைக்கபடும் மிக புனிதமான மற்றும் ரம்மியமான இடம் ....


அடுத்த  பதிவில் காணலாம் ..........


Wednesday 7 August 2013

பில் செட்டில்டு

 பில் செட்டில்டு 

                                            டாக்டர் . கோபெர்ட் ஜில்லி ,இந்த பெயரை கேள்விபட்டு 
இருக்கிருகிரீர்களா ?  மருத்துவ உலகில் இவர் மிகவும் பிரபலமானவர், அமரிக்காவில் இவர் மிகவும் அறியப்பட்ட புகழ் பெற்ற மருத்துவர் ,வேறும் மருத்துவத்திற்காக மட்டும் அல்ல சிறந்த பண்பிற்காகவும் தான் இவர் புகழப்பட்டார் .

          "மேடம் !  யுவர்  பில் ஹாஸ்பீன் செட்டில்டு, போர்ட்டி யீர்ஸ் எகோ ! "

                          டாக்டர் . கோபெர்ட் ஜில்லி யின்  மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு செவிலியர்,மிகவும் மன  கலக்கத்துடன் வரப்போகும் மெடிக்கல் பில்லுக்காக  காத்திருந்த ஒரு வயதான பெண் நோயாளியிடம் கூறிய இந்த வார்த்தைகளின்  பின்னணி  தான்  டாக்டர் . கோபெர்ட் ஜில்லி யின் புகழை உச்சத்திற்கு உயர்த்தியது .


அட ! அப்படி என்னதான்  டாக்டர் . கோபெர்ட் ஜில்லி யின் வாழ்வில் நடந்தது ?


                                 "ஒன்றும் இல்லை " ஆம் நிச்சயமாக  ஒன்றும் இல்லை தான் உண்மையில் சிறுவன் ஒருவனுக்கு சாப்பிடுவதற்கு அப்போது ஒன்றும் இல்லை , வறுமையை தவிர ஒன்றும் இல்லை.ஆனாலும் அவன் சும்மா இருக்கவில்லை 13 வயதில் வயிற்றில் பசியுடன் தினம் தினம் வறுமையுடன் போராடினான் அவன் , தான் வசிக்குக்ம் பகுதியில் இருக்கும் வீடுகளுக்கு பேப்பர் போடுவது, பால் பாகெட் போடுவது,வயதானவர்களுக்கும் ,பிறருக்கும் ஒரு பென்னி காசு அன்பளிப்பிற்கு காய்கறிகள் வாங்கிகொடுப்பது ,போன்ற வேலைகள் செய்து பசியுடன் போராடி போராடி படித்தான் அவன். 

                      சில நேரங்களில் அவனுக்கு நோட்டு புத்தகம் வாங்ககூட காசிருக்காது...,அக்கம் பக்கம் இருக்கும் பிள்ளைகள் பாதி எழுதிவிட்டு தூக்கிபோடும் நோட்டு புத்தகங்களை சேகரித்து அவற்றின் எழுத்தாத பக்கங்களை தானே பைண்டு செய்து பயன்படுத்திகொள்வான் அவன் .


"கொடிது கொடிது வறுமை கொடிது ! அதனினும் கொடிது இளமையில் வறுமை ! "

அனுபவித்து பார்த்தல் தான் அதன் பொருள் எவ்வளவு வேதனை நிரம்பியது என்று தெரியும். 

                  அது அந்த மாதத்தின் கடைசி வார விடுமுறை நாள். வீட்டிலும் உணவில்லை கையிலும் காசில்லை..,  விடுமுறை நாள் ஆதலால் வேலையும் இல்லை,ஆதலால் உணவும் இல்லை.. , சிறுபிள்ளை.. பாவம் பசி தாங்கவில்லை ஆனாலும் தன்மானத்தையும் ,சுயமரியாதையையும் விட்டுக்கொடுக்க அவனுக்கு மனதில்லை , ஆனாலும் பசி.. ! சரி.., தான் அன்றாடம் காய்கறி வாங்கிகொடுக்கும் ஒரு பாட்டியின் வீடு  அதோ அந்த தெருவின் ஓரத்தில் இருப்பது அவனுக்கு தெரியும்.. , அவளிடம் சென்று ஒரு ரொட்டித்துண்டு கடனாக கேட்போம், பின்னர் எதாவது வேலை செய்துகொடுத்து கடனை கழித்துவிடுவோம் என எண்ணிக்கொண்டு அவள் வீட்டின் கதவை தட்டினான் அந்த சிறுவன் .

                                    சிறிது நேரத்திற்கு பிறகு கதவு திறக்கப்பட்டது.. , திறந்தது ஒரு இளம்பெண்.. ! சிறுவனுக்கு சப்பென்று ஆகிவிட்டது ,இதற்குமுன் அவளை அங்கு பார்த்ததில்லை,ஏதோ விருந்தாளி வந்திருக்கிறார்  போல... என அவன்  எண்ணிக்கொண்டு, அவளிடம் தன் வறுமையை காட்டிக்கொள்ள மனதில்லாமல் எதோ வந்துவிட்டேன் என  என்னும் படியாக, ஒன்றுமில்லை ..பாட்டியை பார்க்க வந்தேன் .அவள் இல்லை போலிருக்கிறது.. ,சரி, கொஞ்சம் தண்ணீர்  தாருங்கள் அம்மணி.. என்று பணிவாக கேட்டான் . அவள் அவனை ஓருமுறை நன்றாக உற்றுபார்த்த பின் உள்ளே சென்று ஒரு கோப்பை நிறைய  பால் எடுத்துவந்து அவனிடம் தந்தாள் ,

                       அந்த சிறுவன் விநாடியின் ஒருகணம் மட்டும் தயங்கி பின்னர்  அந்த பாலை வாங்கி குடித்தான்,பின் தன்  கவுரவத்தை சிறிதும் விட்டுகொடுக்காமல் அந்த இளம்பெண்ணை பார்த்து ''நான் பருகிய இந்த பாலுக்கு எவ்வளவு பணம் தரவேண்டும் அம்மணி "என கேட்டான்.

                        அதற்குக்கு அவள் " நான் பால் வியாபாரம் எதும்  செய்யவில்லை... உன் கண்களில் பசியை பார்த்தேன்.. ,பசிக்குத்தான் பால் கொடுத்தேன்... காசுக்கு அல்ல".. என்றாள்.

                               அந்த சிறுவனின்  கண்கள்  கலங்கியது, கண்ணீர் வரும்முன்னர் முகத்தை திருப்பிக்கொண்டு "நன்றி அம்மணி" என கூறிவிட்டு அந்த வீட்டை விட்டு சென்றுவிட்டான்.

                                           வருடங்கள் பல ஓடியது , கோபெர்ட் ஜில்லி நன்றாக படித்து பெரிய மருத்துவர் ஆனார் , நகரத்தில் ஒரு பெரிய மருத்துவமனையை நிறுவி அதன் தலைமை மருத்துவர் ஆனார் .

                                           சில வருடங்களுக்கு பின் நோயாளிகளின் நிலைமை பற்றிய தனது வழக்கமான   மேற்பார்வை பணியின்போது ஒரு வயதான பெண் நோயாளியின் அருகில் வந்ததும் ஒருகணம் அவளை உற்று பார்த்தார் பின் அவளிடம் நீங்கள் எந்த ஊர் ? உங்கள் பெயர் என்ன ? உங்களின் வீட்டு முகவரி என்ன ? என்று சில கேள்விகள் கேட்டார்.. ,அப்போது அவர் கண்கள் சற்று பணித்தது, அதை வெளியில் காட்டிகொள்ளாமல் அவளின் கேஸ்பைலினை வாங்கிபர்ர்த்து இவருக்கு என்ன என்ன மருத்துவ சிகிச்சைகள் தேவைபடுகிறதோ அனைத்தையும் செய்யுங்கள் என பிரத்தியேக மருத்துவ குழுவிற்கு ஆணைபிறப்பித்துவிட்டு மேற்கொண்டு அவளிடம்  ஒன்றும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

                                   அந்த வயதனா பெண்ணிற்கு அளிக்கப்பட்ட உயரிய ராஜ வைத்தியத்தில் விரைவாக அவள் குணமடைந்துவிட்டாள் , அனால் இப்போது அவளுக்கு ஒரே கவலை,தலைமை டாக்டர்  தன்னை பார்த்து சென்றது முதல் தனக்கு அளிக்கப்பட்ட இவ்வளவு உயர்ந்த சிகிச்சைக்கு எவ்வளவு தொகை பில் வருமோ ? நமிடம் உள்ள பொருளாதாரத்திற்கு இதனை எப்படி அடைப்பது ? என்று பலவாறு சிந்தித்துகொண்டுஇருக்கும் போது , அந்த மருத்துவமனையின் செவிலியர் ஒருவர் அவள் அருகில் வந்து குனிந்து மிகவும் பணிவுடனும் முகத்தில் ஆச்சரியம் கலந்த புன்னகையுடனும்  அந்த  வயதனா பெண் காதில் கூறியதாவது ..... 


          "மேடம் !  யுவர்  பில் ஹாஸ்பீன் செட்டில்டு, போர்ட்டி யீர்ஸ் எகோ ! "

      " நீங்கள் டிச்சார்ஜ் செயப்பட்டு விட்டீர்கள்.. வீட்டிற்கு செல்லலாம் , பணம் ஏதும் செலுத்ததேவை இல்லை...  "

                   அந்த வயதனா பெண் வேறு  யாரும் இல்லை, 13 வயதில் வறுமையின் பிடியில் இருந்தபோது அந்த கோபெர்ட் ஜில்லி என்ற சிறுவனின் கண்களில் பசியை கண்ட அதே அந்த இளம்பெண் தான், இந்த வயதான பெண் நோயாளி ...

          "மேடம் !  யுவர்  பில் ஹாஸ்பீன் செட்டில்டு, போர்ட்டி யீர்ஸ் எகோ ! "

 நாமும் தான் அன்றாடம் கேட்கிறோம் நம் நண்பனை பார்த்து. டாஸ்மாக் பாரில் 
             " மச்சி பில் செட்டில்டா ?"

" செட்டில் பந்நீர்லாம்   ஆனால் ...? ஹி..  ஹி ...கொஞ்சம் பத்தல உன்  ATM  கார்டை  ஐ எடு ...நௌ  பில் செட்டில்டு...மச்சி ... " 

சிந்தனை செய் மனமே !! மனமே !!சிந்தனை செய்மனமே..
அட ..! அப்படியா ..!