தமிழ்நாடு பயணர் சங்கம்

தமிழ்நாடு பயணர் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது !!... இறைவன் படைத்த இந்த இனிய உலகில் பயணம் செய்யலாம் வாங்க ..
உங்களின் மேலான கருத்துகளை மிகுந்த உவகையுடன் எதிர்பார்கிறேன் ..
அன்புடன் உங்கள் ராம்கி

என்னை பற்றி...

salem, tamilnadu, India
Tamilnadu Trekking Club(TTC) காடுகளின் ஊடாக களபயணம் மேற்கொள்ளுவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் .என்னுடன் பயணிக்க ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும் .

Sunday 27 January 2013

பருவங்கள் -14

பருவங்கள் -14 


நமது வாழ்வின் ஒவ்வொரு நினையிலும் நாம் எப்படி அழைக்கப்படுகிறோம் என தமிழ் கூறும் நல்லுலகம் பெயரிட்டுள்ளது 


முதாவதாக லேடிஸ் பர்ஸ்ட் 




பெண்களின் ஏழு பருவங்கள்:-

'அரிவை தெரிவை பேரிளம் பெண்ணெனப்
பாற்படு மகளிர் பருவக் காதல்
நோக்கி உரைப்பது நுண்ணியோர் கடனே.’

* பேதை (1 முதல் 8 வயது வரை)

* பெதும்பை( 9 முதல் 10 வயது வரை)

* மங்கை (11 முதல் 14 வயது வரை)

* மடந்தை (15 முதல் 18 வயது வரை)

* அரிவை (19 முதல் 24 வயது வரை)

* தெரிவை (25 முதல் 29 வயது வரை)

* பேரிளம் பெண்( 30 வயதுக்கு மேல்)

பெண்கள் தான் ர் புல் 

ஆதாரம்:

'அரிவை தெரிவை பேரிளம் பெண்ணெனப்
பாற்படு மகளிர் பருவக் காதல்
நோக்கி உரைப்பது நுண்ணியோர் கடனே.’
- பன். பாட். 220
‘பேதைக்கு யாண்டே ஐந்துமுதல் எட்டே.’
-221
‘பெதும்பைக்கு யாண்டே ஒன்பதும் பத்தும்.’
-222
‘மங்கைக்கு யாண்டே பதினொன்று முதலாத்
திரண்ட பதினா லளவும் சாற்றும்.’
’’ 223
‘மடந்தைக்கு யாண்டே பதினைந்து முதலாத்
திடம்படும் ஒன்பதிற் றிரட்டி செப்பும்.’
-224
‘அரிவைக்கு யாண்டே அறுநான்கு என்ப.’
-225
‘தெரிவைக்கு யாண்டே இருபத் தொன்பது.’
-226
‘ஈரைந்து இருநான்கு இரட்டி கொண்டது (36)
பேரிளம் பெண்டுக்கு இயல்புஎன மொழிப.’
-227

ஆண்களின் ஏழு பருவங்கள்:-

‘காட்டிய முறையே நாட்டிய ஆண்பாற்கு
எல்லையும் பெயரும் இயல்புற ஆய்ந்து
சொல்லிய தொன்னெறிப் புலவரும் உளரே.’


*பாலன்( 1 முதல் 7 வரை)

*மீளி (8 முதல் 10 வரை)

*மறவோன் (11 முதல் 14 வரை )

*திறவோன் (15 வயது )

*விடலை (16 வயது )

*காளை (17 முதல் 30 வரை)

*முதுமகன், (30 வயதுக்கு மேல்)

ஆண்களுக்கு கருப்புதான் அழகு ...ஹி ..ஹி 

ஆதாரம்:

‘காட்டிய முறையே நாட்டிய ஆண்பாற்கு
எல்லையும் பெயரும் இயல்புற ஆய்ந்து
சொல்லிய தொன்னெறிப் புலவரும் உளரே.’
-பன். பாட். 228
‘பாலன் யாண்டே ஏழ்என மொழிப.’
-229
‘மீளி யாண்டே பத்துஇயை காறும்.’
-230
‘மறவோன் யாண்டே பதினான் காகும்.’
-231
‘திறலோன் யாண்டே பதினைந்து ஆகும்.’
-232
‘பதினாறு எல்லை காளைக்கு யாண்டே.’
-233
‘அத்திறம் இறந்த முப்பதின் காறும்
விடலைக்கு ஆகும்; மிகினே முதுமகன்.’
-234
‘நீடிய நாற்பத் தெட்டின் அளவும்
ஆடவர்க்கு உலாப்புறம் உரித்து என மொழிப.’
-235 
என்ன கவிதை எழுத தோன்றுகிறதா .........எழுதுங்கள் உங்கள் எண்ணப்படி ...


கொஞ்சம் ஆன்மிகம்


கொஞ்சம் ஆன்மிகம் 

   தத்தாத்ரேயர் எதையெல்லாம் எவற்றிடமிருந்து எப்படியெல்லாம் கற்றார் என்பதை இங்கே இப்படி திருவாய் மலர்ந்தருளுகிரார் கேளுங்கள் அன்பர்களே ..

முதலில் யார் இந்த தத்தாத்ரேயர் ? 

            தத்தாத்ரேயர் என்பவர் சதுரகிரி மலையில் அத்தியூத்து அருகில் மேற்கே கவுண்டினிய ஆற்று கரையில்  ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்த  மாமுனிவர்  அத்திரி மகரிஷிக்கும் அனுசுயா தேவிக்கும் மகனாக பிறந்த மகா ஞானி ...

          எல்லா சிதர்களை போலவும்  சதுரகிரி மலை காட்டில் மிகவும் மகிழ்வுடன் உலாவிக்கொண்டும் மூலிகை ஆராய்சியில் ஈடுபட்டுக்கொண்டும் சித்த ஞானம் தேடிக்கொண்டும் இருந்தபோது 

     அவ்வழியே காட்டிற்கு முனிவர்களை தரிசிக்க வந்த ''  யது  '' என்ற மன்னன் மிகுந்த உற்ச்சாகத்தொடும் உவகையுடனும் கவலையற்றும்  காணப்பட்ட தத்தாத்ரேயரை கண்டு வியப்புற்று அவரிடம்  நீங்கள் எத்துனை மகிழ்ச்சியாக உள்ளீர்களே அதற்க்கு என்ன காரணம் ..? இப்படி மகிழ்ச்சியாக இருக்க எந்த குருவிடம் பாடம் பயின்ற்ரீகள் என வினாவும் போது  அவர் அருளியது இதுதான் ........

    மன்னா எனக்கு பல குருக்கள் பாடம் கற்பித்தனர் அவர்களில் 24 பேரை உனக்கு அறிமுகம் செய்துவைக்கிறேன் கேள் ..என்றார் 


       இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மன்னன், "சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே...' என்றான்.

        அவனிடம்,தத்தாத்ரேயர் .. "பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று, சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு, தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு ஆகியவையும், நாட்டியக் காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப் பவன், சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்...' என்றார் தத்தாத்ரேயர்.

            மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்...

       "மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்;
தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன்.
பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.
எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ உணர்த்தியது;

     பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் தெரிவித்தது.

    "ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மனம் ஒன்றாக இருந்தாலும் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.

  "வேடன் ஒருவன் புறாக்குஞ்சுகளைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது. இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.

         "எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.

       பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.

        பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.
  எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.

          பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது. இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.

        "பிங்களா என்ற நாட்டியக்காரி ஏற்கனவே பலரிடம் வருமானம் பார்த்தபின், இன்னும் யாராவது வரமாட்டார்களா எனக் காத்திருந்தாள். யாரும் வராததால், கிடைத்தது போதும் என்று உறங்கி விட்டாள். இதில் இருந்து ஆசையை விட்டால் எல்லாமே திருப்தியாகும் என்பதை புரிந்து கொண்டேன்.
 
     புற்களுக்கு ஆசைபட்டு குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையை பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்...'

 என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.

   இதைக் கேட்ட அரசன், தன் பதவியையே உதறித் தள்ளி விட்டு, ஆன்மிகத்தில் ஈடுபட்டான்.

தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே!