தமிழ்நாடு பயணர் சங்கம்

தமிழ்நாடு பயணர் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது !!... இறைவன் படைத்த இந்த இனிய உலகில் பயணம் செய்யலாம் வாங்க ..
உங்களின் மேலான கருத்துகளை மிகுந்த உவகையுடன் எதிர்பார்கிறேன் ..
அன்புடன் உங்கள் ராம்கி

என்னை பற்றி...

salem, tamilnadu, India
Tamilnadu Trekking Club(TTC) காடுகளின் ஊடாக களபயணம் மேற்கொள்ளுவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் .என்னுடன் பயணிக்க ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும் .

Wednesday 8 June 2011

Tamilnadu Trekking Club (TTC)

வணக்கம் , களபயணம் மேற்கொள்ளுவது என்பது மிகவும் சுவாரிசியமானது.   அதுவும் தற்போது  இத்தகைய பயணங்கள் அதாவது எகோ -  டுரிசம் என்னும் ஒரு புதிய பெயர் தாங்கி வலம்வந்து கொண்டு
இருக்கின்றன ,எப்படி இருப்பினும்
காடுகளின் ஊடாக நடந்து இயற்கையை ரசித்து கொன்டே அதனனை நிதானமாகவும் ஆற அனுபவித்தும் குறிப்பாக அவற்றினை நாசம் செய்யாமல் பயனம் செய்வது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் .

   தமிழகத்தில் அதற்க்கான பாதுகாப்புமிகு ந்த நிறய இடங்கள் உள்ளன, அவற்றில் சிலவற்றின் ஊடாக நான் பயனித்துள்ளேன், அவை இன்பமயமானதும், சாகசம் நிறை ந்ததாகவும் மனதிற்கு மிகவும் அமைதி தருவதாகவும் இரு ந்தன, அவற்றில்தான் எத்துனை சிற்றாறுகள், ஓடைகள்,தடாகங்ககள்,சிற்றருவிகள்,கற்பனைக்கெட்டாத பெரும்பாறைகள்,
பாறைஇடைகுகைகள் உன்மையில் அவைகள் இயற்கையையின் ஏசிகள்,
இரசாயன கலப்படம் இல்லாத அவற்றின் உன்மையான இயல்பான சுவை கொன்ட இயற்கையாக விளை ந்த பல்வேறுவகையான காய்கள் மற்றும் கனிகள், aha aha enna suvai ! அவற்றின் அருகில் மரத்டியில் ஒரு பாறையில் படுத்து அமைதியாக கவனித்தால் நிறைய பறவைகள், அவற்றின் வித்தியசமான மனதிற்கினிய ஓசைகள், மற்றும் சிறு விலங்குகள் நாம் இருக்கும் இடத்தின் அருகில் தயங்கி நின்று பின் மருன்டு விரைவாக பாய் ந்தோடும் அழகை ரசிப்பதில்தான் எதுனை சுகம் மன அமைதி. இப்படியே இருந்து விடலாமா என தோன்றும்.ஆனால் கவணம் பெரிய மற்றும் ஆபத்தான விலங்குகளை பொருத்தமட்டில் நாம் பயணிக்கும் வனத்தில் பொதுவாக காணப்படும் விலங்குகள் விபரம் பற்றி முன்கூட்டியே தெரி ந்து வைத்திருக்கவேண்டும் உதாரணமாக முதுமலை என்றால் யானைகள் சரணாலயம், சதுரகிரி என்றால் சாம்பல் நிற அணில்கள், யானைகல் சரணாலயம் என்பது போன்று.

          விலங்குகலின் நிலைபாட்டினை அவை வழக்கமாக வலசை போகும் காலம் ,அவற்றின் பொதுவான இரை மற்றும் உணவின் இருப்பிடம், காலடித்தடம், அவற்றின் மலம் அதன் தன்மை, வானிலை மற்றும் நீர்னிலைகள், அது அமை ந்துள்ள இடம்,நீர்னிலைகளில் இருது நாம் இருக்கும் தொலைவு, நீர்னிலைக்கருகில் காணப்படும் காலடித்தடங்கள் ,அதன் அமைப்பு, விலங்குகளெழுப்பும் ஓசைகள் மற்றும் சுற்றுப்புற வெளிச்சம்
அருகில் அமை ந்துள்ள புதர்கள், அதன் அடர்த்தி மற்றும் அமைப்பு, மேலும் முறிக்கப்பட்டிருக்கும் மரகிளைகள் அவை விழு ந்திருக்கும் திசை அதன் பசுமைத்தன்மை மற்றும் மரங்களின் பட்டைகளில், காணப்படும் விலங்குகலின் ரோமங்கள், பிராண்டல்கள், மற்றும் சுற்றுபுற வாசனை
ஆகிய தன்மைகளை கொன்டு அவற்றின் இருப்பிடத்தை உத்தேசமாக கணித்து நாம்தான் அவற்றை விட்டு விலகி செல்லவென்டும்.எக்காரணம் கொண்டும் அவற்றின் அருகில் செல்லவோ, துன்புருத்தவோ முயற்சி செய்ய கூடாது. அவைகளை நம்மை விட்டு விலக்கவும் முயற்சிக்ககூடாது.

             தமிழகத்தில் இத்தகய எழில் கொண்ட எழுச்சிமிக்க பயண இடங்கள் பயணத்திற்க்கு தேவையனாவைகள் பற்றிய விபரங்கள் வேண்டுவோர் மற்றும் என்னுடன் பயணிக்க ஆர்வம் உள்ளவர்கள் ஈமெய்ல் செய்யவும், ramkeyindia@gmail.com