தமிழ்நாடு பயணர் சங்கம்

தமிழ்நாடு பயணர் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது !!... இறைவன் படைத்த இந்த இனிய உலகில் பயணம் செய்யலாம் வாங்க ..
உங்களின் மேலான கருத்துகளை மிகுந்த உவகையுடன் எதிர்பார்கிறேன் ..
அன்புடன் உங்கள் ராம்கி

என்னை பற்றி...

salem, tamilnadu, India
Tamilnadu Trekking Club(TTC) காடுகளின் ஊடாக களபயணம் மேற்கொள்ளுவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் .என்னுடன் பயணிக்க ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும் .

Sunday 4 March 2012

கொல்லிமலை -பகுதி-3


கொல்லிமலை -பகுதி-3 



 
கொல்லிமலை யில் உள்ள அரப்பளிஸ்வரர் பற்றி இங்குள்ளவர்கள் குறிப்பிடும் ஒரு கர்ண பரம்பரை கதை உண்டு அதாவது.....
அடர்ந்த காடுகளுடன் மூலிகைகள் நிறைந்து விளங்கும் கொல்லிமலையில் கோவில் கொண்டு அருள்புரியும் ஈசன்- அறப்பள்ளீஸ் வரர். இவர் சுயம்புவாகத் தோன்றியவர். அதன் சுருக்கமான வரலாறு...


 
முன்னொரு சமயம் கொல்லி மலையில் அறப்பள்ளியன் என்பவன் வாழ்ந்து வந்தான். சிறந்த சிவ பக்தன். மூலிகைகளைக் கண்டறியும் திறன் பெற்ற அவன், அங்கு மூலிகைகளைத் தேடி வரும் மருத்துவர்களுக்கு வழிகாட்டி யாகவும் இருந்தான். அப்படி வரும் மருத்துவர் கள் அவனுக்கு ஏதேனும் பொருள் கொடுப்பார் கள். அதனைக் கொண்டு அவன் வாழ்ந்து வந்தான்.
 

ஒரு மழைக் காலத்தின்போது, குடிசையில் அவன் வைத்திருந்த தேனும் தினைமாவும் தீர்ந்து விட்டன. வெளியில் சென்று உணவு தேட முடியாத நிலையில் பசியால் வாடிய அவன் இறைவனை வேண்டினான். அந்த வேளையில் அழுக்கு ஆடை அணிந்த ஒரு முதியவர் அவன் குடிசைக்கு வந்தார். மழையில் நனைந்து கொண்டி ருந்த அவரை உள்ளே அழைத்தான் அறப்பள்ளியன். உள்ளே வந்த முதியவர், ""கவலைப்படாதே! நானிருக்கும்போது உனக்கென்ன கவலை?'' என்றார்.

அவரை அதிசயத்துடன் பார்த்தான் அறப்பள்ளியன்.

""என்ன அப்படிப் பார்க்கிறாய்? இந்த மலைப்பகுதியில் வசிப்பவர் களையெல்லாம் எனக்குத் தெரியும். மழைக்காலத்தில் உனக்கு எதுவும் கிடைக்காது. அதனால் நீ இந்தப் பகுதியை சீர்திருத்து. அப்பொழுது நீ எதிர்பாராத செல்வம் கிடைக்கும். ஆடி மாதம் பிறந்ததும் நான் சொன்னது போல் செய்'' என்றார் அவர்.

""தங்கம் கிடைக்குமா சாமி?'' என்றான் அறப்பள்ளியன்.

""அதைவிட உயர்ந்தது கிடைக்கும்'' என்று கூறிய அந்த முதியவர் தான் கொண்டு வந்திருந்த தினைமாவையும் தேனையும் அவனிடம் கொடுத்து விட்டு, ""வந்த வேலை முடிந்தது'' என்று சொல்லி, அவனை வாழ்த்தி விட்டு வெளியேறினார்.
 
அவர் சென்ற வழியைப் பார்த்தான் அறப்பள்ளியன். அவர் ஓரிடத்தில் நின்று அவனைத் திரும்பிப் பார்த்து கைகளைத் தூக்கி வாழ்த்தினார். அப்படியே மறைந்து போனார். வந்து போனவர் யாரோ ஒரு சித்தர் என்பதை உணர்ந்து மெய்சிலிர்த்தான் அவன். பின்னர் அவன் குடிசைக்கு முன் இருந்த இடங்களை சீர் செய்யத் தொடங்கி னான். பெரிய கற்களை அகற்றி சமன்படுத்தி னான். ஒருநாள், அவன் கடினமான ஒரு பாறையை அப்புறப்படுத்தும்போது ஓர் ஒளி தோன்றியது. ஒளி தோன்றிய இடத்தில் உள்ள கற்களைக் கைகளால் அப்புறப் படுத்தும்போது ஒரு சிவலிங்கம் தானாக வெளிவந்தது! சிவலிங்கம் தோன்றிய நாள் ஆடி மாதம், பதினேழாம் நாள்! அப்போது மிகக் கடுமையாக மழை பெய்ய ஆரம்பித்தது. இடி மின்னலுடன் காற்றும் வீசியது. அதனால் அவன் குடிசைக்குத் திரும்பி விட்டான்.

மறுநாள் அவன் சற்றும் எதிர்பாராத விதத்தில் அன்று வந்த முதியவர் மீண்டும் அங்கு வந்தார்.

அவர் கால்களில் விழுந்து வணங்கியவன், நடந்ததைச் சொன்னான்.

""நீ மட்டும் மழையில் நனையாமலிருக்க குடிசையில் இருக்கிறாய். உன் தெய்வம் மட்டும் மழையில் நனையலாமா?'' என்று சித்தர் கேட்டதும், அவன் சிவலிங்கத்தைப் பார்த்தான். அங்கு சிவலிங்கத்தைச் சூழ்ந் திருந்த நீரில் சில மீன்கள் லிங்கத்தைச் சுற்றி வலமாக வருவதைப் பார்த்தான். உடனே தன் குடிசையின் ஒரு பகுதியைப் பிரித்து அங்கு பந்தல் போட்டான். அந்த சித்தர் பெருமான் மீன்கள் சுற்றி வந்த அந்த இடத்தில் கிழக்கு நோக்கி அந்தச் சிவலிங்கத்தை நிறுவினார். அந்த நாள் ஆடி பதினெட்டு. சிவ பூஜை செய்யும் வழிமுறைகளை அவனுக்குச் சொல் லிக் கொடுத்து விட்டுச் சென்றார் அந்தச் சித்தர்.

அறப்பள்ளியன் முதன் முதலில் அந்தச் சிவலிங்கத் தைக் கண்டதால் அந்தச் சிவலிங்கம் "அறப்பள்ளீஸ் வரர்' என்று பெயர் பெற்றது.
 
இதன் காரணமாகவே இப்பொழுதும் இந்த ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் பதினேழு, பதினெட்டு, பத்தொன்பதாம் தேதி களில் சிவன் தோன்றிய நாளாகத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
 
சித்ரா பௌர்ணமி அன்று இத்திருக்கோவில் வளாகத்தில் பக்தர்கள் தனிப்பட்ட முறையில் யாகங்கள் செய்கிறார்கள். இத்திருக்கோவிலில் தினமும் முதல் மரியாதையாக இக்கோவிலின் வடக்குப் பகுதியில் உள்ள ஸ்ரீசரப தீர்த்தத்தில் (ஆறு) வாழும் மீன்களுக்கே பூஜை செய்யப் படுகிறது. இதற்கும் ஒரு வரலாறு உண்டு.

பல வருடங்களுக்குமுன் இந்தக் கோவிலில் உள்ள பொருட்களைக் கொள்ளையடிக்க சிலர் வந்தார்களாம். அவர்கள் ஆற்றில் இறங்கி கோவிலை நோக்கி வரும்போது பெரிய பெரிய மீன்கள் துள்ளிக் குதிப்பதைக் கண்டனர். இந்த கொழுத்த மீன்களைப் பிடித்து சமைத்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும் என்று மீன்களைப் பிடித்து அறுத்து, அங்கேயே ஒரு குச்சியில் அந்த மீன்களைச் செருகி, தீ மூட்டி வாட்டியிருக்கிறார்கள். சாப்பிடுவதற்குப் பதமானதும், அப்பகுதியிலிருந்த தாமரை இலைபோல் இருந்த பெரிய இலையைப் பறித்து, அதில் தீயில் வாட்டிய மீன்களை எடுத்து வைத்திருக்கி றார்கள். அப்பொழுது தீயில் சுடப்பட்ட மீன்கள் முழு வடிவம் பெற்றுத் துள்ளிக் குதித்து ஆற்றில் விழுந்து மறைந்தனவாம். இதனைக் கண்ட அந்தத் திருடர்கள் அங்கிருந்து பயந்து ஓடி விட்டார்களாம். அதன் காரண மாகவே இங்கு மீன்களுக்குப் பூஜை செய்யப்படுகிறதாம்.

குழந்தைச் செல்வம் இல்லாதவர்களும் திரு மணத் தடை உள்ளவர் களும் மற்றும் பல துன் பங்கள் நீங்கவும் இங்கு வந்து வேண்டிக் கொண் டவர்கள், தங்கள் குறை தீர்ந்ததும் இந்த ஆற்றில் உள்ள மீன்களுக்கு மூக் குக் குத்தி சிறிய அணி கலன் அணிவித்து ஆற் றில் விடும் நிகழ்ச்சி இங்கு நடைபெறுகிறது.
 
ஆற்றங்கரை அருகி லுள்ள இத்திருக்கோவிலைச் சுற்றி பெரிய மதில் சுவர். கிழக்கு பார்த்த (ராஜகோபுரம் இல்லாத) நுழைவாயில். கோவிலுக்குள் சென்றதும் கொடி மரம், பலி பீடம். அதனைத் தொடர்ந்து நந்தியெம்பெருமான் சிவ பெருமானைப் பார்த்த வண்ணம் உள்ளார். இந்த நந்திக்கு மூன்று கால்கள் மட்டுமே உண்டு. பின்புற வலக்கால் இல்லை. இது பற்றியும் புராணக் கதை உண்டு.
 
இக்கோவிலிலிருந்து சுமார் பத்து மைல் தூரத்தில் புளியஞ்சோலை என்ற ஊர் உள்ளது. அங்கே விவசாயப் பெருங்குடி மக்கள் நிலக்கடலை பயிரிட்டிருக்கிறார்கள். அவ்வாறு பூக்கள் பூத்ததும், அதன் மணம் சுற்றுப்புறங் களில் மணக்கும். அவ்வாறு பூக்கள் பூத்தால் நிலத்தடியில் கடலை நல்ல முற்றிய நிலையில் உள்ளது என்பர். கடலைப் பூக்களின் மணம் நந்தியின் மனதைக் கவர்ந்தது. அதனால் நந்தி இரவு வேளையில் உயிர்பெற்று எழுந்து புளியஞ்சோலைக்குச் சென்று, கடலை வயலில் தன் கொம்புகளால் குத்திக் கிளறி கடலைக் காய்களை கொத்து கொத்தாகச் சுவைத்துவிட்டு விடிவதற்குள் கோவிலுக்கு வந்துவிடுமாம். இதுபோல் தொடர்ந்து நடக்கவே, விவசாயி கள் அந்தப் பகுதியை ஆட்சி புரிந்த குறு நில மன்னரிடம் கூறினர். அவர் இரண்டு வீரர்களை அந்தப் பகுதிக்கு அனுப்பி கண்காணிக் கச் சொன்னார். நள்ளிரவில் அங்கே வந்த நந்தியைக் கண்ட வீரர்கள் அதனை விரட்ட முயல, அது அந்த வீரர்களை முட்டுவதற்கு முயன்றது.

ஒரு வீரன் நீண்ட இரும்பு ஆயுதத்தால் நந்தியின் வலது பின்னங்காலை வெட்டி னான். கால் வெட்டப்பட்ட நந்தி கோவி லுக்கு ஓடிவந்து விட்டது. காலை இழந்த நந்தி இறைவனிடம் முறையிட, ""ஒருவர் வயலில் அனுமதி இல்லாமல் அத்துமீறி நுழைந்தது தவறு. நீ திருடித் தின்ற கடலைக்குத் தண்டனைதான் இது. இப்படியே இரு'' என்று சொன்னாராம் இறைவன்.

விவரம் அறிந்த விவசாயிகள் தங்கள் செயலுக்கு வருந்தியதுடன், தினமும் நந்திக்குப் பிடித்த கடலைக்காய்களை அதற்குச் சமர்ப்பித்தார்கள்.

நந்தியெம்பெருமானைத் தரிசித்து விட்டு உள்ளே மகா மண்டபத்திற்குள் நுழையும்போது வாசல் பகுதியின் இரு பக்கங்களிலும் துவார பாலகர்கள்போல் சித்தர்கள் இருவர் காட்சி தருகிறார்கள்.

மகா மண்டபத்தையடுத்து அர்த்த மண்டபம். அதைத் தொடர்ந்து கிழக்கு நோக்கிய கருவறை. சந்நிதியில் ஸ்ரீஅறப் பள்ளீஸ்வரர் அருள்புரிகிறார்.

ஒரு அடி அகலத்தில் மூன்றடி உயரத்தில் காட்சி தருகிறார். இவரை ஸ்ரீ தர்மகோசீஸ் வரர் என்றும் அழைப்பர். கருவறையின் வலப்புறம் விநாயகர் எழுந்தருளியுள்ளார். மூலவரைத் தரிசித்தபின் மகா மண்டபம் வந்தால் தெற்கு நோக்கிய தனிச் சந்நிதியில் அம்மன் "தாயம்மை' நின்ற கோலத்தில் அருள்புரிகிறாள். அம்மனை ஸ்ரீதர்ம கோசீஸ்வரி என்றும் அழைப்பர். இந்த அம்பாள் காமாட்சியின் திருவுருவமாகப் போற்றப்படுகிறாள். லட்சுமி, சரஸ்வதி ஆகியோரும் இவளுக்குள் அடக்கம். எனவே இவளை வணங்கினால் முப்பெருந்தேவியரை ஒருசேர தரிசித்த பலன் கிட்டும்.

அம்பாள் எதிரே வாகனம் எதுவும் இல்லை. அம்பாளை வழிபட்டு சிறிது பின் நோக்கினால் மேலே விதானத்தில் அஷ்ட லட்சுமி சக்கரம் உள்ளது. ஸ்ரீசக்கரத்தைத் தரிசித்தபின் மகா மண்டபத்தின் தெற்கு வாசல் வழியாக வெளியே வந்தால் வள்ளி- தெய்வானையுடன் ஆறுமுகனார் மயில்மீது அமர்ந்து தனிச் சந்நிதியில் வடக்கு நோக்கி அருள்புரிகிறார். இவரது பார்வை அம்பாளை நோக்கி உள்ளது தனிச் சிறப் பாகும். கன்னி மூலையில் ஸ்ரீஔஷத கணபதி எனப்படும் வலம்புரி விநாயகர் எழுந்தருளியுள்ளார்.

மேற்கு கோஷ்டத்தில் மகா விஷ்ணு எழுந்தருளி யுள்ளார். மகா விஷ்ணுவை நோக்கி மகாலட்சுமி சந்நிதி உள்ளது. இச்சந் நிதிக்கு அடுத்து வீணை யுடன் சரஸ்வதி எழுந்தருளி யுள்ளாள். இந்த சரஸ் வதிக்கு ஸ்ரீவித்யா சரஸ் வதி என்று பெயர்.

இக்கோவிலின் வடக்குப் பகுதியில் ஸ்ரீசர பேஸ்வர தீர்த்தக் கரை உள்ளது. கொல்லிமலை களில் தோன்றும் ஐந்து அருவிகள் ஒன்று சேர்ந்த புனித நீர் இதுவென்று சொல்லப்படுகிறது. ஸ்ரீசரபேஸ்வர தீர்த்தம் என்னும் இந்த ஆறு கரடுமுரடான கற்கள் உள்ள பகுதியில் ஓடி வந்து இங்கு சிறிய நீர்வீழ்ச்சிபோல் விழுகிறது.

இத்தீர்த்தக் கரைக்குக் கோவிலிலிருந்து சுமார் நூறு படிகள் கீழே இறங்கிச் செல்ல வேண்டும். தீர்த்தக்கரையின் வலப்புறத்தில் தனி மண்டபத்தில் விநாயகர் அருள்புரிகிறார்.

இத்தீர்த்தத்தில் பல அரிய மூலிகைகள் கலந்திருப்பதால் இதில் நீராடினால் உடல் நலம் வளம் பெறும், சரும நோய்கள் நீங்கும், அனைத் துத் தோஷங்களும் விலகும் என்பர். இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் ஆகாசகங்கை என்னும் தீர்த்தம் (நீர்வீழ்ச்சி) உள்ளது. கரடுமுரடான பாதையில் சென்று 1,200 படிகள் மேல்நோக்கிச் செல்ல வேண்டும்!

இந்தக் கொல்லிமலைப் பகுதியில் சித்தர்கள் பலர் வாசம் செய்வதாலும், அரிய மூலிகைச் செடிகள் இங்கு உள்ளதாலும் அதன் மணம் நம்மை ஒருநிலைப்படுத்தும் உணர்வை நாம் அறியலாம். மேலும், ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சித்தர்கள் இந்த மலையில் உள்ள அருவிகளில் நீராடுவார்களாம். அப்பொழுது, அவர்கள் மக்கள் உடல்நலம் வளம் பெற சில அரிய மூலிகைகளைப் பறித்து அரைத்து மந்திரங்கள் ஜபித்து, இந்த அருவி நீரில் கலப்ப தாக நம்பப்படுகிறது. அதனால், இந்த ஸ்ரீசர பேஸ்வர தீர்த்தத்தில் (ஆற்றில்) பௌர்ணமிக்கு அடுத்த நாள் நீராடுவது சிறப்பிக்கப்படுகிறது. இங்கு அருள்புரியும் ஈஸ்வரன் சக்தி வாய்ந்த ஞான மூர்த்தி. இவர் மூலிகை வாசம் கொண்டவராதலால் இவருக்குக் காட்டப்படும் தீபாராதனைத் தீபத்தில்கூட மூலிகை வாசத்தை உணரலாம்.

இக்கோவிலில் அமாவாசையன்று அன்னதானம் செய்தால் பித்ரு தோஷம் விலகும்; அவர் களின் ஆசி கிட்டும். இத்தல ஈசனையும் அன்னையையும் வணங் கினால் சுகமான வாழ் வும் எதிர்பாரா செல்வ மும் கிட்டும்!

என்று நீண்ட கதை சொல்லுகிறார்கள் 

நமது பயணம் தொடரும் ...........

கொல்லிமலை -பகுதி-2




கொல்லிமலை -பகுதி-2


பேளுக்குறிச்சி: நள்ளிரவில் நடக்கும் பலசரக்குச் சந்தை!




 பேளுக்குறிச்சியில் ஆண்டுதோறும் 3 மாதங்கள் நடைபெறும் பாரம்பரியம் மிக்க பலசரக்கு சந்தை . ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் ......குறைந்த விலையில் பொருட்களை வாங்கதற்போதெல்லாம்  வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வரத் தொடங்கியுள்ளனர்.
 இயற்கை மூலிகைகளுக்குப் பெயர் பெற்ற கொல்லிமலை, நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது. இங்கு, மூலிகைகள் மட்டுமல்லாமல் முக்கனிகள், மசாலா பொருட்களின் விளைச்சலும் அதிகம்.
 கொல்லிமலையில் உள்ள செம்மேடு, சோளக்காடு, நடுக்கோம்பைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சீரகம், சோம்பு, மிளகு, கடுகு, ஏலக்காய், கசகசா, வெந்தயம் போன்ற வாசனை திரவியங்கள் பயிரிடப்படுகின்றன.
 இப்பகுதியில் விளையும் பொருட்கள் தரமானதாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் கொல்லிமலைக்கு வந்து வாசனைத் திரவியங்களை வாங்கிச் செல்வதுண்டு.


 அனைத்து வாசனை திரவியங்களையும் ஒரே இடத்தில் விற்பனை செய்யும் வகையில் மலையடிவாரப் பகுதியான பேளுக்குறிச்சியில் சந்தை அமைக்கப்படுகிறது.
 இரவுச் சந்தை: பல நூற்றாண்டுக்கும் மேல் நடைபெறும் இச்சந்தை ஆண்டுதோறும் மாசி மாதம் தொடங்கி சித்திரை மாதம் வரை 3 மாதங்கள் நடக்கும். வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை காலை 11 மணி வரை என வாரத்தில் 2 நாள்களுக்கு மட்டுமே சந்தை நடைபெறும். 
இதேபோன்று, தொடர்ந்து 10 வாரங்களுக்கு விடிய, விடிய வியாபாரம் நடப்பதால் இது இரவுச் சந்தை என்றே அழைக்கப்படுகிறது.
 விலை குறைவு: வெளி மார்க்கெட்டில் 1,200 ரூபாய்க்கு மேல் விற்பனையாகும் பொருட்கள் இச்சந்தையில் 800 முதல் ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும். வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ 70 ரூபாய்க்கு விற்கப்படும் துவரம் பருப்பு, இங்கு 40 முதல் 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
 இதே போல் வீட்டுக்கு தேவையான அனைத்து வகை பொருட்களும் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது. எனவே, தமிழகம், புதுச்சேரி உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து வாசனைப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

 குறிப்பாக, தென்மாவட்டங்களான மதுரை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், சிதம்பரம், கும்பகோணம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பேருந்து, வேன் போன்ற வாகனங்களைப் பிடித்து குழுக்களாக வருவர்.

 ஒரு ஆண்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்க வரும் மக்களின் கூட்டம், ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

 படி அளவையில் வியாபாரம்: எடையளவு இல்லாமல், படி அளவைக் கொண்டு நடைபெறும் இந்த விற்பனையில் சோம்பு, சீரகம், மிளகு, கடுகு, வெந்தயம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு செட் 800 முதல் 900 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
 ஒரு ஆண்டுக்குத் தேவையான பொருட்களை குடும்பம், குடும்பமாக வண்டி பேசிக்கொண்டு வந்து வாங்கிச் செல்வதால், பணம் மிச்சமாகிறது என்கின்றனர் வாடிக்கையாளர்கள்.
 பல கோடி வர்த்தகம்: வியாபாரிகள் குறைந்த லாபத்தில், அதிக வியாபாரம் செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர். நகரங்களுக்கு இணையாக பேளுக்குறிச்சி சந்தைக்கு பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்வதால் பல கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறுகிறது என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.
 அடிப்படை வசதி ஏற்படுத்தப்படுமா?: பல கோடி வர்த்தகம் நடக்கும் இப்பகுதியில் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அடிப்படை வசதிகள் செய்துதர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் 

நமது அடுத்த பதிப்பில் மீண்டும் கொல்லிமலைக்கு பயணம் .....

தொடரும் நம் பயணம் ..........

கொல்லிமலை -பகுதி-1


கொல்லிமலை -பகுதி-1 

ஓகே .. அன்பர்களே..நமது அடுத்த பயணம் ரெடி ..


மனதை  கொள்ளை கொள்ளும் , ஒரு சூப்பரான ..இயற்கையான இடம் தான் எவர் கிரீன் கொல்லிமலை ..பேரை கேட்டாலே சும்மா அதிருதில்ல ..ஆமாம் கொல்லிமலையை பற்றி ஏற்கனவே நம்மை போதும் போதும் என்கிற அளவிற்கு எல்லோரும் ஏன்இலக்கியங்கள் உட்பட பயமுருதிவிட்டர்கள்..


ஆனால் உண்மை நிலவரம் அதுவல்ல ..இங்குள்ள அரியவகை மூலிகைகளை பாதுகாப்பதற்காக சித்தர்கள் செய்த உபாயம்.தான்.இந்த கொல்லிப்பாவை ......கொல்லிபேய்..மதிமயக்கி...செய்வினை ...செயாவினை...செயப்பாட்டுவினை ..என்பதெல்லாம் ...ஆகவே நோ மோர் பயம் அன்பர்களே .... சித்தர்கள் விரும்பியபடி எதையும் சேதபடுதாமல் இயற்கையை ரசியுங்கள் ...அவை மிக அழகானது 


அரபலீஸ்வரர் கோயில் 
..இருப்பினும் இது ஒரு மர்மமான இடம் என்ற பேச்சு இருக்கிறது. கொல்லிப்பாவை கோவில், சித்தர்கள் வாழ்ந்த குகைகள், மூலிகை வனம், இப்போதும் ஆங்காங்கே கண்ணில் படும் சித்தர்கள்,


 300 அடி உயரத்திலிருந்து பிரம்மாண்டமாய் விழும் அருவி என புதிரான ஒரு பிரதேசமாகவே நமக்குத் தெரிகிறது கொல்லிமலை.இந்த அருவியின் பிரமாண்டத்தை சொல்ல வார்த்தை இல்லை அப்படியே மலைத்து போய் விட்டோம் 
 




 



போய் தான் பாருங்களேன் இந்த அருவியை ரசியுங்கள் அதன்  பிரமாண்டத்தை 

நீண்ட நாட்களாகவே ,அருகில் உள்ள கொல்லிமலைக்கு நமது வழக்கமான காடுவழி பயணம் மேற்கொள்ளவேண்டும் என்பது ஆவல் ..ஆனாலும் நேரமின்மையால் தள்ளிகொன்டே போனது ..மிக சமிபத்தில்தான் அதற்கான வாய்ப்பு கிட்டியது .உடனே மூட்டைகட்டினோம் கொல்லிமலைக்கு 

அமைவிடம் ...

 
  


இந்தியாவின் தெற்கு பகுதியில் தமிழ்நாட்டின்நடுப்பகுதியில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு சிறிய மலைத்தொடராகும். 1100 முதல் 1300 மீ உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டது.


 இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால், கொல்லி மலை இன்றும் இயற்கை அழகுடனே விளங்குகிறது.

 

கொல்லிமலை நாமக்கல்லிலிருந்து 65 கி.மீ. தொலைவிலும், சேலத்தில் இருந்து ராசிபுரம் வழியாக சுமார் 90 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சதுரகிரி என்ற மற்றொரு பெயரும் கொண்ட கொல்லிமலை (நாமக்கல் மாவட்டத்தில் ) 17 மைல் பரப்பளவிற்கு விரிந்து படர்ந்த அடர் மூலிகை காடுகளுடன் தனித்து ஒரு அமானுஷ்யமாக விளங்குகிறது.




எப்படி போவது ....??!!

கொல்லிமலைக்கு நாமக்கல், சேந்தமங்கலம்,இராசிபுரம் மற்றும் சேலம் நகர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது.




 மலைப்பாதையின் தூரம் 26 கிமீ. இம்மலைப்பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால் அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வரை மட்டுமே பெரிய பேருந்துகளும் பெரிய வண்டிகளும் செல்ல முடியும். 




சில கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் அபாயமான வளைவுகளை கொண்டிருப்பதால் தேர்ந்த ஓட்டுனர்களே பேருந்துகளையும் சுமையுந்துகளையும் ஓட்டிச்செல்வர்.


கார் & வேன்களில் சுற்றுலா செல்வோரும் மலைப்பாதையில் கவனமாக செல்வது நன்று

.இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் நல்ல பிரேக் மற்றும் பிக் அப் உள்ள ( 2 ஸ்ட்ரோக் ) வாகனமாக தேர்வு செதுகொள்ளவும் ...நாங்கள் சேலத்தில் இருந்து சென்றதால் இருசக்கர வாகனத்தில் தான் சென்றோம்


 வழி ...ராசிபுரம் ...சேந்தமங்கலம் ....பேளுகுருச்சி..... காலப்பநாய்க்கன்பட்டி...


 காரவள்ளி....(இது தான் மலை அடிவாரம் ...இங்கு வனத்துறையின் சோதனை சாவடி ஒன்றும் உள்ளது ..



.இங்கு இரண்டு ஹோட்டல்கள் ஒரு சில மளிகை கடைகள் உள்ளன ..பேருந்தில் வந்தாலும் இங்கு சிறிது நேரம் நிற்கும் நீங்கள் சாபிட்டு வரலாம் ஆவ்ளளவு லேட்..ஆகும் )
 
மலை எறிபோனால் வரோவது செம்மேடு என்றட இடம் இதுதான் கொல்லிமலை பஸ் ஸ்டாண்ட்




இந்த பேளுகுருச்சி யை பற்றி சொல்லாவிட்டால் கொல்லிமலை பயணம் முழுமை பெறாது என்பதால் முதலிலய்யே சொல்லிவிடுகிறேன்



அடுத்த பதிவில் பேளுக்குறிச்சி: நள்ளிரவில் நடக்கும் பலசரக்குச் சந்தை!



தொடரும் நம் பயணம் .....


Saturday 3 March 2012

சதுரகிரி-பகுதி -5



சதுரகிரி-பகுதி -5 

நீண்ட இடைவேளைக்கு பிறகு நமதுபயணம் தொடர்கிறது ...

 நேரம் இன்மையால் பதிவை உரிய காலத்தில் எழுதாமைக்கு  மன்னிக்கவும் ..


 சரி நான் முன்பே கூறியது போல இந்த தானிபாறை மிகவும் சுவாரிசியமானது .. இங்கு அமைந்துள்ள ஆசிர்வாத பிள்ளையார் கோவிலுக்கு அருகில் ராஜகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது .. 






இப்படத்திற்கு பின்னால் தெரிவது தான் ஆசிர்வாத பிள்ளையார் கோவில் 

இங்குதான் அம்மாவாசை அன்று  மதியம் அன்னதானம் நடைபெறுகிறது கூவி கூவி அன்புடன் அழைத்து உணவிடுகிரர்கள் . சுவையான காய்கறி பிரியாணி ,அல்லது தக்காளி சோறு ..சாம்பார் சாதம்.. இப்படி எதாவது ...நிறைய சில்வர் தட்டுகள் வைத்திருப்பார்கள் .. வரிசையில் நின்று அன்னதானம் பெற்றுக்கொள்ளலாம் .. பின்னரர் அந்த தட்டுகளை நாம் கழுவி அடுக்கி வைத்து விடவேண்டும் .. முடிந்தால்  அன்னதானத்திற்கு பண உதவி செய்யலாம் அன்புடன் வாங்கிகொள்வார்கள்..

 நாம் மலை  பயணம் முடிந்து மதியம் இங்கு இருப்பது போல திட்டம் வகுத்துக்கொண்டல் (அம்மாவாசைஅன்று ) மதிய உணவை இங்கேயே முடித்து கொண்டு ஊருக்கு பஸ் ஏறிகொல்ள்ளலாம் மிகவும் வசதியாக இருக்கும் நேரம் மிச்சம் 
ஆசிர்வாத பிள்ளையார் கோவில் எத்ரில் ஒரு தற்காலிக புத்தக கடை மற்றும் படங்கள் விற்கும் சில கடைகள் உண்டு நமக்கு தேவையான வற்றை வந்கிகொல்ள்ளலாம் 










இந்தமிகபெரிய பாறையானது தோனி வடிவத்தில் ஏறக்குறைய அரை  வட்ட  வடிவில் அமைந்திருபதால்  தான் தோனி பாறை என்று பெயர் வந்தது என இங்குள்ளவர்கள் சொல்கிறார்கள்  அது பின்னர் மருவி தானிபாறை என்று தற்போது வழங்கி வருகிறது 




இங்கு சதுரகிரி காட்டில் இருந்து வரும் கௌண்டின்ய ஆற்றின் மீது ஒரு செக் டாம் (தடுப்பணை ) கட்டி இருகிறார்கள் ... மிகவும் சுவாரிசியமானது இந்த இடம் .. நீங்கள் இங்கு மழைகாலத்தில்  இலவசமாக சறுக்கி  வாட்டர் கேம் (water  game  )  விளையாடலாம் ..இயற்க்கை தரும் பரிசு .. இதற்கான காணொளி பின்ரோ சந்தர்பத்தில் தருகிறேன் ...நானும் கூட சறுக்கி விளையாண்டிருகிறேன்,,சூப்பரோ சுப்பர் ...



அருகில் சுடசுட வடை போண்டா விற்பனை அருமை ..சுக்கு காபியுடன் சுகமாக நடந்து வந்த களைப்பு தீர சிறிது நேரம் அமர்ந்திருக்கலாம் ... (எல்லாம் அம்மாவாசை ..பௌர்ணமி நாட்களில் தான் )



இதோ இந்த பெரியவர் நின்று கொண்டிருக்கும் இடத்தில உள்ள திட்டில் தான் உணவு பரிமாறுவார்கள்
எதிரே மூட்டுவலி கிழங்கில் தயாரித்த சூப்பு 5 ருபாய் ..குடிக்கலாம் ..  மூட்டுவலிகிழங்கு விற்பனையும் உண்டு ..சூப்பு தயாரிப்பது  எப்படி எனவும் சொல்லி விற்கிறார்கள் ....இதுவும் அம்மாவாசை ..பௌர்ணமி நாளில்  மட்டும்தான் ..மற்ற நாட்களில் கடைகள் கிடையாது ..

நமது மலை பயணத்தில் இங்கிருந்து சிறிது தூரம் சென்றால் அங்கே தானிபாறை கருப்புசாமி கோவில் உள்ளது ..சித்தர்கள் அமைத்த சதுரகிரி காவல் தெய்வங்களில் ஒன்று ..பேய்ச்சி அம்மன் சிலையும் அக்கோவிலில் உள்ளது ..


 கருப்ப சாமி கோயில் 

அருள்மிகு கருப்பசாமி 
 இங்கு இந்த சுற்று வட்டார  பகுதியை சேர்ந்தவர்கள் கிடாவெட்டி சமைத்து பூசை செய்து காது குத்து போன்ற தங்கள் நேர்ச்சி கடனை செய்து கொள்கிறார்கள் ..

இக்கோவிலுக்கு எதிரே தற்போது சதுரகிரி மலைக்கு செல்வதற்கு ஓரளவிற்காவது ஏற்படுத்தப்பட்ட பாதையை அமைத்த பச்சையம்மாள் என்ற சிவ பக்தையின் சமாதி உள்ளது அதன் மீது ஒரு சிவ லிங்கமும் காணபடுகிறது ...இவரை பற்றி விரிவாக இத்தொடரின் ஊடாக பினொரு சந்தர்பத்தில் விசேட செய்தியாக தருகிறேன் ..
இங்கிருந்து சற்று கீழே கௌண்டின்ய ஆற்றில் ஒரு சிறிய தடாகம் அமைந்துள்ளது ..


சமாதி 

 இங்கிருந்து காட்டு பாதை தொடங்குகிறது நாமும் நமது பயணத்தை இனி வரும் பதிவுகளில் தொடருவோம் ......